tag:blogger.com,1999:blog-4575376734741440058.post6854617747293260775..comments2023-09-23T08:35:57.500-07:00Comments on சாமானியனின் கிறுக்கல்கள் !: விடாது துரத்திய விஷ்ணுபுரம் !saamaaniyanhttp://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comBlogger73125tag:blogger.com,1999:blog-4575376734741440058.post-16392534430010893162015-01-08T12:52:01.264-08:002015-01-08T12:52:01.264-08:00அய்யா,
பின்னூட்டத்தையும் தொடர்ந்து பதலளித்ததற்கு ...அய்யா,<br /><br />பின்னூட்டத்தையும் தொடர்ந்து பதலளித்ததற்கு நன்றிகள்.<br /><br />நானும் காவல்கோட்டத்தை இப்போதுதான் ஆரம்பித்துள்ளேன்... <br /><br />" ... மனம் பித்தாகி, பிறழ்ந்து, நினைவு மங்கிய ஒரு காலவெளி போல நிகழ்காலத்தைக் கடந்துபோவது ஓர் எழுத்தாளனுக்கு இயற்கை விதித்த நியதி... "<br /><br />மேலே குறிப்பிட்டது காவல் கோட்டம் முன்னுரையில் சு. வெங்கடேசன் அவர்களின் வார்த்தைகள் ! அந்த நாவலுக்கான அவரின் பிரம்மாண்ட உழைப்பு பிரம்மிக்க வைக்கிறது.<br /><br />நிச்சயமாய் உங்கள் பதிவுகளை படித்து பின்னூட்டமிடுவேன் அய்யா.<br /><br /> " உங்கள் நண்பா்கள் யாரும் இங்கிருந்து அங்கு வருவதாக இருந்தால் எனக்குத் தெரிவியுங்கள் எனது நூல்களை அவர் முகவரிக்கு அனுப்பி உங்களிடம் சேர்க்க முயல்வேன் "<br /><br />நிச்சயமாய் ! உங்கள் பேரன்புக்கு நன்றி.<br /><br />" உங்கள் படிப்பின் அகலம் படைப்பின் ஆழமாகத் தொடரவேண்டும் என்பதே எனது வேண்டுகோள். "<br /><br />அய்யா... உங்களின் வேண்டுகோள் இனி காலத்துக்கும் என் நெஞ்சில் பதிந்திருக்கும்.<br /><br /><br /> saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-28797668646152855222015-01-04T08:31:53.005-08:002015-01-04T08:31:53.005-08:00நன்றி சாம். விஷ்ணுபுரத்தை மட்டுமல்ல... காவல் கோட்ட...நன்றி சாம். விஷ்ணுபுரத்தை மட்டுமல்ல... காவல் கோட்டத்தை நான் இன்னும் படிக்கவில்லை என்றால் நம்புவீர்களா? (என் தோழன் சு.வெ.யிடமே “கொஞ்சம் இருப்பா.. உன் நாவலை வாங்கணும்னா நான் ஜி.பி.எஃப் லோன் போடணும், படிக்கணும்னா 15நாள் மெடிக்கல் லீவ் போடணும் போலயே?”னு கிண்டல் பண்ண, அவன் என்னை முறைக்க... அது இன்னும் நிறைவேறவில்லை... என்னவோ இப்போதெல்லாம் நாவல் படிக்க அலுப்பாக வருகிறது.. ஜே.கே.யின் நாவல்கள் சிறுகதைகள் கட்டுரைகள் அத்தனையும் படித்து நான் எழுதிய கட்டுரை இணைப்பை ஒருமுறை படிக்கக் கேட்டுக் கொள்கிறேன். அதோடு, உங்கள் நண்பா்கள் யாரும் இங்கிருந்து அங்கு வருவதாக இருந்தால் எனக்குத் தெரிவியுங்கள் எனது நூல்களை அவர் முகவரிக்கு அனுப்பி உங்களிடம் சேர்க்க முயல்வேன். உங்கள் படிப்பின் அகலம் படைப்பின் ஆழமாகத் தொடரவேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-73952995543283633602015-01-03T23:57:04.839-08:002015-01-03T23:57:04.839-08:00அய்யா,
என் பதிவுகளுக்கான உங்களின் பின்னூட்டங்கள்,...அய்யா,<br /><br />என் பதிவுகளுக்கான உங்களின் பின்னூட்டங்கள், முக்கியமாய் இந்தப் பதிவுக்கான பின்னூட்டம் எனக்கு மிகுந்த ஊக்கத்தைக் கொடுக்கிறது. உங்கள் முதல் பின்னூட்டம் என் தவறினால் அழிந்துவிட, உடனடியாக மீன்டும் ஒரு நீண்ட பின்னூட்டம் கொடுத்தமைக்கு நன்றிகள் பல.<br /><br />நீங்களெல்லாம் தமிழ்க்களமாடி வென்றவைகளை ஓரமாய் நின்று ஆச்சரியத்துடன் ரசிக்கும் என்னைப் போன்ற ஒரு சாமானியனின் பதிவை ஆழமாய் வாசித்து, உங்கள் அனுபவங்களையும் பகிர்ந்துள்ளீர்கள்...<br /><br />"...இலக்கியம் பயனுடையதாக மட்டுமே இருக்க வேண்டும் என்பதில்லை, மகிழ்ச்சியூட்டுவதாகவும் இருக்கவேண்டும் என்பதே இப்போதைய எனது புரிதல்..."<br /><br />மிகவும் உண்மை அய்யா ! பயனுள்ள எண்ணங்களின் ஊற்றுக்கண் மகிழ்ச்சியுற்ற இதயம் தானே ?!<br /><br />எனது வாசிப்பு அனுபவம் கடுகளவிலும் குறைவு."வாசிப்புக்காக " அலைந்த அனுபவங்களின் தொகுப்பே இந்தப் பதிவு. நான் கடைசியாய் அலைந்தது விஷ்ணுபுரம் நாவலுக்காக என்றதால் முடிவு அப்படி அமைந்துவிட்டது.<br /><br />அதுவே காவல்கோட்டத்துக்காக அலைந்திருந்தால்...<br /><br />தமிழின் சிறுவர் இலக்கியத்துக்காக மட்டுமே தன் வாழ்நாளை அர்ப்பணித்த வாண்டுமாமா என்ன ஆனார் எனத் தேடாமல், நடிகையின் நாபிச்சுழிக்கு டூப் போட்டது உண்மையா என கலந்துரையாடல் நடத்தும் ஊடங்களை கொண்ட சமூகத்தில் காவல்கோட்டம் கிடைக்காததில் ஆச்சரியம் இல்லை ! "<br /><br />என உணர்ச்சிவசப்பட்டிருப்பேன் !<br /><br />மேலும் என்னைப் போன்ற வெளிநாடுவாழ் இந்தியர்களுக்குத் தமிழின் நூல் பற்றிய தகவல் கிடைக்கும் அளவுக்கு அதன் ஆசிரியரின் சுயதம்பட்டப் பேட்டிகள அதிகம் கிடைப்பதில்லை !<br /><br />" இந்திய காவிய மரபின் வளமைகளையும், அழகுகளையும் உள்வாங்கிஎழுதப்பட்ட, நூறு வருடத் தமிழ் இலக்கியத்தின் மிகப்பெரிய முயற்சி... "<br /><br />என்பதாகப் போகும் அந்த நாவலின் முன்னூட்டத்திலேயே நீங்கள் குறிப்பிட்ட கருத்துகள் எனக்கும் தோன்ற, துணுக்குற்றேன் "<br /><br />என்று சகோதரர் ஜோசப் விஜுவின் பின்னூட்டப் பதிலில் குறிப்பிட்டிருக்கிறேன்.<br /><br />நிறைய தர்க்கமும், வாதமும் செய்ய வழியுள்ள விஷ்ணுபுரம் தத்வார்த்தமான ஒரு நல்ல நூல்... அவ்வளவே !<br /><br />மற்றப்படி அதன் ஆசிரியர் அறைகூவும் " இந்திய காவிய மரபின் வளமைகளையும், அழகுகளையும் உள்வாங்கிஎழுதப்பட்ட, மிகப்பெரிய முயற்சி... " ஜெர்மனிய எழுத்தாளன் ஹெர்மான் ஹேஸ் எழுதிய சித்தார்த்தாவிலேயே தொடங்கிவிட்டது !!!<br /><br />டிசம்பர் 3, 2014 இந்தியா டுடேயின் ஜெயமோகன் நேர்காணலில்...<br /><br />" ஒரு விஷ்ணுபுர வாசகனோ, வெண்முரசு வாசகனோ மற்ற எந்த படைப்பையும் தன் காலடில்தான் வைக்கிறான். இங்கிதமில்லாம மற்ற எழுத்தாளர்களப் பாத்து நீ ஏன் இப்படி எழுத மாட்டேன்றன்னு நேரடியா கேட்டிருறான். "<br /><br />எனத் திருவாய் மலர்ந்துள்ளார் ! <br /><br />வித்யாகர்வம், அறிவுச்செருக்கு என்பதையெல்லாம் தாண்டிய அறியாமை அகந்தையிது !!!<br /><br />இதைப் படித்ததும் அவரது வாசகர்கள் புரிந்துகொண்ட அளவுக்கு கூட, விஷ்ணுபுரத்தின் தத்துவங்களை அதன் படைப்பாளி புரிந்துகொள்ளவில்லை என்றே எனக்கு தோன்றியது !<br /><br />குரோட்டன்சுகளாகவாவது இருந்திருக்கவேண்டிய படைப்புகள் அவற்றை படைத்தவரின் அகந்தையால் பார்த்தீனியங்களாக மாறிவிடுவது நகைமுரண் !<br /><br />மீன்டும் நன்றிகள் அய்யா.saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-58486969485660013922015-01-02T21:33:04.194-08:002015-01-02T21:33:04.194-08:00தெரியாமல் அழித்துவிட்டீர்களா? பரவாயில்லை விடுங்கள்...தெரியாமல் அழித்துவிட்டீர்களா? பரவாயில்லை விடுங்கள்... எனக்கும் கொஞ்சம் திருப்தி...நான்தான் இப்படி தொழில்நுட்ப அறிவு-கணினிஅனுபவக் குறைவோடு இருக்கிறேனோ என்ற என் ஐயத்தைப் போக்கி நானும் இருக்கிறேன் என்று எனக்கு ஆறுதலாக இருப்பதால்(?!) எனக்கும் இந்தமாதிரி அனுபவங்கள் உண்டு.. பின்னூட்டத்தை அப்லோட் பண்ணுவதாக நினைத்து அழித்த அனுபவம் மட்டுமல்ல, புத்தகங்களோடு திரிந்த அனுபவத்தைச் சொல்கிறேன். நான் எழுதிய நீண்ட பின்னூட்டத்தின் சுருக்கம் இதுதான் - பள்ளிக்காலத்தில் -அதிராம்பட்டினம் காதிர்முகைதீன் உயர்நிலைப்பள்ளி ஒன்பதாம் வகுப்புக் கணித ஆசிரியர் திரு உலகநாதன் அவர்கள் அறிமுகப்படுத்திய- கல்கியின் பொன்னியின் செல்வன் தொடங்கி, சாண்டில்யன், மு.வ., நா.பா, பின்னர் கல்லூரிக்காலத்தில் தி.ஜா., பு.பி.,ஜெ.கா...என நகர்ந்து டி.செல்வராஜ், கு.சி.பா., தமிழ்ச்செல்வன், மேலாண்மை, கந்தர்வன் அம்பை, பாமா எனத் தொடர்வதுதான்.. இன்னும் சுருக்கமாகச் சொல்வதெனில் இலக்கியம் பயனுடையதாக மட்டுமே இருக்க வேண்டும் என்பதில்லை, மகிழ்ச்சியூட்டுவதாகவும் இருக்கவேண்டும் என்பதே இப்போதைய எனது புரிதல். இதை, ஜெயகாந்தன் மற்றும் க.நா.சு.பற்றிய எனது கட்டுரைகளில் பார்க்கலாம் -<br />முறையே - http://valarumkavithai.blogspot.com/2013/01/blog-post_7.html , http://valarumkavithai.blogspot.com/2012/02/blog-post.html ஆகவே, தங்களின் வாசிப்பு ருசியை வாழ்த்தி வரவேற்கும்போதே, கி.ரா. தோப்பில் தி.ஜா. எல்லாம் சரி, ஆனால் ஜெயமோகனுக்காக இவ்வளவு உணர்ச்சிவசப்பட வேண்டியதில்லை என்பதே. ஏனெனில், நம்போன்றோர் வீடுகளுக்குத் தேவை துளசிச் செடிகளே அன்றி குரோட்டன்சுகள் அல்ல.. நன்றி நண்பரே.. வாழ்க உங்கள் தேடல். வணக்கம்.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-21441786404152547812015-01-02T13:42:54.051-08:002015-01-02T13:42:54.051-08:00Thank you my dear sister... I wish you the same in...Thank you my dear sister... I wish you the same in French... " MEILLEURS VOEUX ET BONNE SANTE ! "saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-81610018005613272522015-01-02T13:40:27.823-08:002015-01-02T13:40:27.823-08:00நன்றி ஆசானே
இந்த புத்தாண்டின் துவக்கம் உலகின் மனி...நன்றி ஆசானே<br /><br />இந்த புத்தாண்டின் துவக்கம் உலகின் மனிதநேய மறுமலர்ச்சி விடியலாக அமையட்டும். ஜாதி, மத, மொழி, பிராந்திய வேற்றுமைகளை களைந்து மனிதம் வளர்ப்போம்.<br />saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-26803350183256748102015-01-02T13:39:44.853-08:002015-01-02T13:39:44.853-08:00நன்றி நண்பரே !
இந்த புத்தாண்டின் துவக்கம் உலகின் ...நன்றி நண்பரே !<br /><br />இந்த புத்தாண்டின் துவக்கம் உலகின் மனிதநேய மறுமலர்ச்சி விடியலாக அமையட்டும். ஜாதி, மத, மொழி, பிராந்திய வேற்றுமைகளை களைந்து மனிதம் வளர்ப்போம்.<br />saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-73119602250566677312015-01-02T13:17:50.385-08:002015-01-02T13:17:50.385-08:00நண்பரே,
மன்னிப்பு என்ற வார்த்தைகளெல்லாம் தேவையா ?...நண்பரே,<br /><br />மன்னிப்பு என்ற வார்த்தைகளெல்லாம் தேவையா ?!<br /><br />" அந்த கடைசி வரிகள் - நெற்றியடி. "<br /><br />சில காரணங்களால் கண்டுக்கொள்ளப்படாமலேயே விடுபட்ட கடைசி வரிகளின் பொருள் உணர்ந்து பின்னூட்டமிட்டதற்கு நன்றி !saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-52413621714603522612015-01-02T13:15:33.796-08:002015-01-02T13:15:33.796-08:00நன்றிகள் பல ஆசானே !
இந்த புத்தாண்டின் துவக்கம் உல...நன்றிகள் பல ஆசானே !<br /><br />இந்த புத்தாண்டின் துவக்கம் உலகின் மனிதநேய மறுமலர்ச்சி விடியலாக அமையட்டும். ஜாதி, மத, மொழி, பிராந்திய வேற்றுமைகளை களைந்து மனிதம் வளர்ப்போம்.<br /><br /><br />saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-26820465904062784152015-01-02T13:13:42.048-08:002015-01-02T13:13:42.048-08:00" இப்போது தான் புரிகிறது வாசிப்பு எவ்வளவு முக..." இப்போது தான் புரிகிறது வாசிப்பு எவ்வளவு முக்கியம் என்பது நான் இவற்றை இழந்து விட்டேனே என்று வருந்துகிறேன். "<br /><br />பிரெஞ்சு மொழியில் " Jamais trop tard ! " என்பார்கள்... தாமதமாகிவிட்டது என்பதே கிடையாது. ஆரம்பித்தல்தான் முக்கியம் ! வாசிப்பின் முக்கியம் உணர்ந்த நொடியே அனைத்தையும் பெற்றுவிட்டீர்கள் சகோதரி ! <br /><br />ஹா...ஹா...ஹா... அதீத வசதி யாருக்கு வேண்டும் சகோதரி ?! வாசிப்பினால் உண்டாகும் தெளிவுக்கும் பகுத்தறிவுக்கும் முன்னால் பொருட்செல்வம் ஈடாகுமா ?! <br /><br />அந்த வாசிப்பின் தைரியத்தில்தானே எமனையே எத்த நினைத்தான் பாரதி ?!<br /><br />ரசித்து பின்னூட்டமிட்டதற்கு நன்றி<br /><br />saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-3409415590147107302015-01-02T13:07:16.774-08:002015-01-02T13:07:16.774-08:00உங்கள் முதல் வருகைக்கும்,அனுபவம் பகிரும் வார்த்தைக...உங்கள் முதல் வருகைக்கும்,அனுபவம் பகிரும் வார்த்தைகளுக்கும் நன்றிகள் பல. தொடர்ந்து வாருங்கள்.<br /><br />நன்றிsaamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-34470232355005869082015-01-02T13:06:18.679-08:002015-01-02T13:06:18.679-08:00நண்பரே,
பொருளாதாரம் வாசிக்கும் வாய்ப்பை உங்களுக்க...நண்பரே,<br /><br />பொருளாதாரம் வாசிக்கும் வாய்ப்பை உங்களுக்கு வழங்காமல் இருந்திருக்கலாம், ஆனால் உங்கள் பதிவுகள் நீங்கள் ஒரு சமூக அக்கறையுள்ள நல்ல எழுத்தாளர் என்பதை பறைசாற்றுகின்றன. உங்கள் வாழ்த்துக்கு நன்றி<br /><br />உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் என் ஆழுந்த அனுதாபங்கள். குடும்பம் முக்கியம் தோழரே... படைப்புகள் இங்குதான் இருக்கும் ! பொறுமையாக படித்துகொள்ளலாம் !<br /><br />உங்களின் வருகை நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.<br /><br />நன்றிsaamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-43075148380644157712015-01-02T12:54:30.378-08:002015-01-02T12:54:30.378-08:00" கடற்கரையில் கடலை வாங்கித் தின்றால் கூட தூக்..." கடற்கரையில் கடலை வாங்கித் தின்றால் கூட தூக்கி எறியுமுன் அந்த பேப்பரில் எழுதியிருப்பதையும் படித்து விட்டுத் தூக்கி எரியும் கூட்டத்தில் நானும் ஒருவன்.... "<br /><br />வாங்கிய வடையை மறந்துவிட்டு வடை மடித்த துண்டு பேப்பரை படித்து, டீயை ஆறிவிட்ட அனுபவம் எனக்கும் உண்டு நண்பரே !<br /><br />" சமீபத்தில் விஷ்ணுபுரம் உட்பட வாங்கி வைத்திருக்கும் புத்தகங்கள் பலவற்றைப் படிக்க நேரமில்லாமல் வைத்திருப்பது குற்ற உணர்வைத் தருகிறது. முன் போல அவ்வளவு வேகமாகப் படிக்க முடியவில்லை! "<br /><br />வாசிப்பில் ஆர்வம் உள்ளவர்கள் அனைவருக்குமே உள்ள வருத்தம்தான் இது !<br /><br />நன்றி<br />saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-3843990009367295502015-01-02T12:51:56.072-08:002015-01-02T12:51:56.072-08:00பின்னூட்டத்தில் பெருந்தன்மையுடன் எழுதியிருந்தாலும்...பின்னூட்டத்தில் பெருந்தன்மையுடன் எழுதியிருந்தாலும் மூத்த வலைப்பதிவரான உங்களிடம் நான் கற்றுக்கொள்ளவேண்டியது தான் அதிகம்...<br /><br />கற்றது கையளவு என்பதால்... ஒன்றாக கற்போம் ! ஒற்றுமையாய் தொடர்வோம் !<br /><br />நன்றிsaamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-14537484099782758662015-01-02T12:49:09.455-08:002015-01-02T12:49:09.455-08:00ஒரு சமூகத்தின் வேதனை முழுவதையுமே ஓரிரு வரிகளில் பத...ஒரு சமூகத்தின் வேதனை முழுவதையுமே ஓரிரு வரிகளில் பதிந்துள்ளீர்கள் நண்பரே !<br /><br />டாஸ் மார்க் நடத்தி, இலவச பிச்சைகளிடும் அரசாங்கம் உருப்படியாக செய்திருக்கவேண்டியது அனைவருக்கும் வாசிக்க கிட்டும் நூலகங்கள்... ஹும் !<br /><br />நன்றிsaamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-16138544317298813192015-01-02T12:46:14.733-08:002015-01-02T12:46:14.733-08:00அய்யா,
தங்களை போன்ற, ஆழ்ந்த வாசிப்பையும் தாண்டி வ...அய்யா,<br /><br />தங்களை போன்ற, ஆழ்ந்த வாசிப்பையும் தாண்டி விமர்சனங்கள் எழுதும் பெரியவர்கள் எனது பதிவுகளை படித்து பின்னூட்டமும் இடுவது மகிழ்ச்சியையும், இனி எழுதுவதை இன்னும் சிறப்பாக செய்ய வேண்டும் என்ற பொறுப்பையும் ஒரு சேர தோற்றுவிக்கிறது.<br /><br />ஆமாம் அய்யா, நூலகம் உள்ள வீடுகளில் ஆலய பக்தியும் தானாகவே குடியேறிவிடும்.<br /><br />தங்கள் வருகைக்கு நன்றிகள் பல<br />saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-87156862552690305822015-01-02T12:39:17.789-08:002015-01-02T12:39:17.789-08:00நண்பரே,
தங்களின் முதல் வருகைக்கும் இதமான வார்த்தை...நண்பரே,<br /><br />தங்களின் முதல் வருகைக்கும் இதமான வார்த்தைகளுக்கும் நன்றி.<br /><br />" My parents never objected my reading... "<br /><br />நமது சமூகத்தில் அப்படிப்பட்ட பெற்றோர்கள் அமைவது பேறு. அந்த வகையில் நாம் கொடுத்துவைத்தவர்கள் !<br /><br />தொடர்ந்து வருகை தாருங்கள். நன்றிsaamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-48577055375668137652015-01-01T02:03:51.542-08:002015-01-01T02:03:51.542-08:00சாம் அண்ணா wish you a happy and healthy new year:)...சாம் அண்ணா wish you a happy and healthy new year:)மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-11402733192372764562014-12-31T23:48:21.455-08:002014-12-31T23:48:21.455-08:00எனது அருமை நண்பர்/அவர் தம் குடும்பத்தினர்,
அனைவருக...எனது அருமை நண்பர்/அவர் தம் குடும்பத்தினர்,<br />அனைவருக்கும் மனங் கனிந்த இனிய இறையருள்மிக்க,<br /><br />"புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்"<br /><br />என்றும் நட்புடன்,<br />புதுவை வேலு<br />www.kuzhalinnisai.blogspot.fryathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-53039924745353823672014-12-31T18:03:05.860-08:002014-12-31T18:03:05.860-08:00தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் மனம...தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் மனம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!<br /><br />அன்புடனும், நட்புடனும்<br /><br />துளசிதரன், கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-65593063999175380672014-12-30T19:36:53.575-08:002014-12-30T19:36:53.575-08:00மிகவும் தாமதமாக வந்ததற்கு மன்னிக்கவும்.
"//ம...மிகவும் தாமதமாக வந்ததற்கு மன்னிக்கவும்.<br /><br />"//முதலாம் வகுப்பு குழந்தைகள் கூட நூலகங்களுக்கு தொடர்ந்து அழைத்து செல்லப்படுகிறார்கள். கலை, இலக்கிய ரசனை அவர்களுக்கு பால்யத்திலிருந்தே பயிற்றுவிக்கப்படுகிறது.//"<br /><br />உண்மை தான். இங்கு பாலர் வகுப்புகளிலேயே (kinder) பள்ளியில் இருக்கும் நூலகத்திலிருந்து வாரம் ஒரு முறை ஒரு புத்தகத்தை கொடுத்து அனுப்புகிறார்கள். <br /><br />நான் இந்தியா போகும்பொழுது, சென்னையில் இருக்கும் புத்தக வெளியீட்டாளர்களின் அலுவலகத்துக்கே சென்று எனக்குத் தேவையான புத்தகத்தை வாங்கி வந்துவிடுவேன். <br /><br />உங்களின் புத்தக தேடல், கண்டிப்பாக நீண்டதொரு பதிவை கொடுக்கும் என்பதில் சந்தேகமேயில்லை. <br /><br />அந்த கடைசி வரிகள் - நெற்றியடி. <br /> unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-52309494718960855522014-12-30T17:17:32.519-08:002014-12-30T17:17:32.519-08:00தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் இதய...தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்! <br /><br />அன்புடனும், நட்புடனும்<br /><br />துளசிதரன், கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-19104969415395918482014-12-30T09:22:21.492-08:002014-12-30T09:22:21.492-08:00வணக்கம் சாம் ! தங்கள் வாசிப்பானுபவம் எழுத்தாற்றல் ...வணக்கம் சாம் ! தங்கள் வாசிப்பானுபவம் எழுத்தாற்றல் எடுத்தாளும் விடயம் அனைத்தும் வியக்கும் வண்ணமே அமைந்துள்ளது. கண்கள் அகல அனைத்தும் ஆர்வத்தோடு வாசித்தேன். அம்மாவின் ஊக்கம் தரும் பேச்சும் என்னைக் கவர்ந்தது. நூல்களை தேடித் தேடி அறிவுப் பசியை தீர்த்ததும் என்னைக் கவர்ந்தது எனக்கு இந்த சூழல் அமையவில்லை. இப்போது தான் புரிகிறது வாசிப்பு எவ்வளவு முக்கியம் என்பது நான் இவற்றை இழந்து விட்டேனே என்று வருந்துகிறேன். விஷ்ணு புரத்தை தேடித் திரிந்ததும் அடைந்த விதமும் கூட ஆச்சரியப் பட வைத்தது. அதையும் முன்னரே படித்து விட்டு சாதாரணமாக அந்நூலை தூக்கி தந்த உங்கள் நண்பர். ம்..ம்..ம்.. பேச்சிழந்து நிற்கின்றேன். வாசிப்பு உங்கள் இருவரையும் வளமாக வைத்திருகிறது. வசதியை சொல்லவில்லை ஹா ஹா மூளைவிருத்தியை சொல்கிறேன் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ....! அன்றே வாசித்து விட்டேன் இன்று தான் கருத்திட முடிந்தது.தாமதத்திற்கு மன்னிக்கவும். <br />தங்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்....! <br />எனக்கும் விஷ்னுபுரம் வாசிக்கவேண்டும் என்று ஆவலாகவே உள்ளது கிடைக்குமா தெரியலை. பார்க்கலாம். இது நிச்சயம் தேவையான நல்ல பதிவே நல்ல அனுபவம்.ரசித்தேன் அனைத்தையும்.<br /><br />Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-11186475708147016962014-12-29T19:35:27.347-08:002014-12-29T19:35:27.347-08:00என் பள்ளி பருவ நினைவகள் சில நிமிடம் வந்து சென்றன. ...என் பள்ளி பருவ நினைவகள் சில நிமிடம் வந்து சென்றன. நான் எந்த ஊருக்கு சென்றாலும் நூலகத்தை தேடிச் சென்று படித்ததுண்டு. அது ஒரு சுகமான நினைவுகள்.... எளிய நடையில் இனிமை நினைவுகள். பகிர்வுக்கு நன்றி....!நாவலந்தீவுhttps://www.blogger.com/profile/15663953478975254191noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4575376734741440058.post-28525351772333462562014-12-29T05:46:19.758-08:002014-12-29T05:46:19.758-08:00ராணி காமிக்ஸில் ஆரம்பித்து கோகுலம், பூந்தளிர், அம்...ராணி காமிக்ஸில் ஆரம்பித்து கோகுலம், பூந்தளிர், அம்புலிமாமா, குமுதம் ,விகடன் என்று வளர்ந்தது என் வாசிப்பு! எங்கள் ஊரில் நூலகவசதி இல்லை! பொருளாதாரமும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை! இருந்தாலும் சில புத்தகங்களை தேடி வாசித்து இருக்கிறேன். கி.ராஜநாராயணனின் எழுத்துக்களை விகடனில் வாசித்து இருக்கிறேன்! இப்பொழுதுதான் நிலைமை ஓரளவு சரியாகி இருக்கிறது. புத்தகங்களுக்கு என ஒரு தொகை ஒதுக்கி நிறைய நூல்களை வாசிக்க வேண்டும். தி.ஜா.வின் ஒரு சிறுகதை தொகுப்பை வாசித்ததாக ஞாபகம், எருமைப்பொங்கல் என்று நினைவு. விஷ்ணுபுரம் பற்றி கேள்வி பட்டு இருக்கிறேன்! இந்தவருட புத்தகச்சந்தையில் முடிந்தால் வாங்கி வாசிக்க வேண்டும். சிறப்பான கட்டுரை! பகிர்வுக்கு நன்றி! இந்த இடுகை வெளியான சமயம் என் சித்தப்பா மகன் இறந்து துக்கத்தில் இருந்தமையால் உடனே வாசிக்க முடியாமல் போய்விட்டிருக்கிறது. உங்கள் இடுகைகளை தொடர்கிறேன் நண்பா! விஷ்ணுபுரம் படித்து முடித்த பின் நூலை பற்றி எழுதவும் இது ஒரு வேண்டுகோளே! கட்டளை இல்லை! நேரமும் விருப்பமும் இருந்தால் எழுதுங்கள்! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.com