Monday, March 30, 2015

த்ரோ தேம்பெர்மாசியோன் துய் லேம்பெர்மாசியோன் !

ன்ன ஆச்சு ? ஏதோ அப்படி இப்படிக் கிறுக்கினாலும் நல்லா தான் இருந்தார்... திடீர்ன்னு அடிக்கடி வலைதளத்திலிருந்து காணாமல் போக ஆரம்பிச்சார்... இப்ப புரியாத மொழியில தலைப்போட கிறுக்கறார்... என்ன ஆச்சு இந்தச் சாமானியனுக்கு ?

வுட்வேர்ட்ஸ் கிரேப் வாட்டர் கொடுக்கச் சொல்லலாமா ?!...

குழம்ப வேண்டாம் அன்பர்களே !


" Trop d'information tue l'information " என்ற பிரெஞ்சு மேற்கோளை அப்படியே தமிழில் எழுதி தலைப்பிட்டேன்... !

 பிரெஞ்சு அரசியல்வாதியான நோயேல் மாமேர் ( Noël Mamère )

என்பவரால் முதலில் பயன்படுத்தப்பட்ட இந்த மேற்கோள் இன்று மேலாண்மை துறையில் அதிகம் பயன்படுத்தப்படும் மேற்கோள். இன்றைய இணைய வாழ்க்கைக்கு மிகப் பொருத்தமாக அமைந்த வார்த்தை தொடர் !

" Too much information kills information " என ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கலாம்.

இந்த மேற்கோளை " அதிகமான செய்தி செய்தியை கொன்றுவிடும் ! " என ஜூனூன் தமிழில் மொழி பெயர்க்கவேண்டிய அவசியமே இல்லாமல் பண்ணிவிட்டார்கள் நம் முன்னோர்கள் !

" அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு " என்ற சொல் வழக்கிலேயே எல்லாம் அடங்கிவிட்டது !



( இன்றைய " மச்சான் டாமில் " போல என்பதுகளில் பிரபலமான ஜூனூன் தமிழ் பற்றித் தெரியாத அன்பர்கள் எனக்குத் தனிமடலில் விண்ணப்பம் வைத்தால் விளக்கமாக எழுதுவேன் !!! )

ஒரு செய்தியை பற்றி அதிகமாகப் பேசும் போது அந்தச் செய்தியின் முக்கியத்துவம் போய் விடுகிறது என்பதே இந்த மேற்கோளின் விளக்கம்.

கணினி திரையின் முன்னால் அமர்ந்து ஒரு வார்த்தையைத் தட்டினால் ஓராயிரம் விளக்கங்கள் வந்துவிழும் இன்றைய நிலையில் நாம் தேடுவதின் முக்கியத்துவம் குறைந்தால் கூடப் பரவாயில்லை, சில வேளைகளில் சாதாரணமான ஒரு வார்த்தைக்குக் கூடப் பூதகரமான பல தகவல்கள் வந்துவிடுவதுதான் பிரச்சனை ! அதுவும் நாம் தேடுவது உடல்நிலை மற்றும் நோய்நொடிகள் சம்மந்தமான செய்தி என்றால் சொல்லவே வேண்டாம்...

" அங்கு வலித்தால் அந்த நோயாக இருக்கலாம், இங்கு இழுத்தால் இந்த வியாதியாக இருக்கலாம் ! "

என வந்து விழும் விளக்கங்களின் மூலமாகவே தகவல் தேடுபவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுவிடும் ஆபத்து  உண்டு ! ஆக, அதிகமான செய்தி செய்தி செய்தியை கொன்றுவிடுமோ இல்லையோ ஆனால் படிப்பவரை கொல்லும் அபாயம் இணையத்தில் உண்டு !!!

நாற்பதை தொட்டுவிட்ட ஞானம் திடீரெனப் பிறந்ததால், சில மாதங்களுக்கு முன்னால் முழு மருத்துவ பரிசோதனை  செய்துகொண்டேன்... எல்லாம் நன்றாக இருந்தாலும் இரத்ததில் கொழுப்பின் அளவு கொஞ்சம் அதிகம். என் வாய்க்கொழுப்பை பற்றி எனக்கே தெரியும் என்றாலும் இந்தக் கொழுப்பு சற்றுப் பயம் ஏற்படுத்திவிட, வழக்கமாக நான் பார்க்கும் மருத்துவர் விடுப்பில் இருந்ததால் வேறொரு மருத்துவரை பார்த்தேன்.

" சர்க்கரையைவிடக் கொழுப்பு ஆபத்தாச்சே... இரத்தநாளம் அடைத்தால் போச்சு... "

என்ற ரீதியில் பேசிவிட்டு கொழுப்புக்கான மருந்தினை தொடர்ந்து உட்கொள்ளச் சொல்லிவிட்டார்.

நானும் மாத்திரையோடு நிறுத்திக்கொள்ளாமல் அவித்த காய்கறி, பாலில்லாத டீயென வெகு சிரத்தையாய் செயல்பட்டு மெலிந்துவிட்டேன். ( மெலிவதற்கு முன்பாகவே நான் நடிகர் மனோபாலா போல் இருந்தவன் ! )

ரு மாதம் ஓடியிருக்கும்... வேலையின் போது இடது கையில் மெல்லிய கடுப்பு... உடனடியாக மருத்துவரை பார்க்க போயிருக்கலாம் !

இன்றுதான் தொலைபேசி தொடங்கி அலைபேசி வரை அனைத்திலும் இணைய வசதி இருக்கிறதே ! ...

" கொழுப்பின் அளவு கூடுதல்... இடது கையில் வலி... " எனத் தட்டியதுதான் தாமதம்...

" தோள்பட்டையில் வலி தொடங்கும்.... நடுவிரல் வரை பரவும்... விட்டுவிட்டு வலிக்கும்... இதயம் அதிகமாகத் துடிக்கும்... வியர்த்துவிடும்... "

என்றெல்லாம் தகவல்கள் விழ விழ, எனக்குக் கண்கள் கட்டி, அதுவரையிலும் கேட்காத இதயத்துடிப்பு ,நண்பர் காரிகன் சிலாகிக்கும் ஆங்கில பாடல்களின் ட்ரம்ஸ் போல ஷார்ப், பேஸ் சகிதம் அதிர, வியர்த்துவழிய தொடங்கியது !


அவசர சிகிச்சைக்கு அலைபேசலாமா... உடனடியாக மருத்துவமனைக்கு ஓடலாமா... இந்த நிலையில் கார் ஓட்ட கூடாதே என்றெல்லாம் பதைத்து...

மதங்களைப் பற்றியெல்லாம் மானாவாரியாய் வலைப்பூவில் எழுதிவிட்டோமே.... உண்மையிலேயே நரகம் இருந்தால் என்னாகும் என்றெல்லாம் பயந்து...

விடுமுறையிலிருந்து திரும்பியிருந்த மருத்துவருக்கு உடனடியாகப் போன் செய்தேன் ! இணையத்தில் மேய்ந்ததைச் சொல்லாமல் வலி என்று மட்டும் சொன்னேன் !!

" பயப்பட ஒண்ணுமில்லை... இருந்தாலும் உடனடியா கிளம்பி வாங்க ! "

வலி விபரங்களைப் பொறுமையாய் கேட்டவர் கூற, " பயப்பட ஒன்றுமில்லை " என்ற வார்த்தையே என்னை ஆசுவாசப்படுத்தியது !

" நான் வருவதற்குள்ள என்ன அவசரம்... ? அப்படி ஒண்ணும் அதிகமா இல்லையே ! முதல்ல உணவுல கட்டுப்பாடா இருந்து மூன்று மாதம் பார்த்துட்டு அடுத்ததா ஒரு பரிசோதனை பண்ணி, குறையலேன்னா மருந்து எடுத்துக்கலாம்... "

நாடி முதல் இதயத்துடிப்புவரை பரிசோதித்துவிட்டு டாக்டர் கூறினாலும், மனதில் இணைய இம்சை !

" அப்ப... கை வலி டாக்டர் ?.... "

" ம்ம்ம்... ஏதாச்சும் கடுமையான வேலை செஞ்சீங்களா ? "

அந்த வார இறுதியில் தோழி வீட்டுத் தோட்டத்தில் ரோஜா பதியன்களுக்காக மாங்கு மாங்கென மண் கிளறியது அப்போதுதான் ஞாபகம் வந்தது !

" ஆ... ஆமா டாக்டர் ! "

" திடீர்ன்னு கடுமையா வேலை செஞ்சா கை வலிக்காம என்ன பண்ணும் ?! "

அசடு வழிய விடை பெற்றேன் !

ணயம் ஒரு மாபெரும் புரட்சி ! ஒரு பத்தாண்டுகள் முன்பு வரை சமூகத்தின் ஒரு சில பிரிவினருக்கு மட்டுமே சாத்தியமாக இருந்த தகவல்களும், பொது அறிவும் இன்று உலகின் கடைக்கோடி மனிதனுக்கும் கிடைப்பதற்குக் காரணம் இணையமே !

ஆனால் அந்த இணயம் நம் முன்னால் இழுத்து வீசும் தகவல்களின் நம்பகத்தன்மை சில வேளைகளில் சந்தேகத்துக்கிடமானதாக அமைந்துவிடுவது தவிர்க்க முடியாதது ! காரணம்,  யார் வேண்டுமானாலும் எதையும் உள்ளிடலாம் என்ற கட்டற்ற கருத்துச் சுதந்திரம் !

இதயம் என்று தேடினால் இதயநோய் நிபுணர் செரியனின் ( இவரின் புகழும் பரிதாப முடிவும் ஞாபகத்தில் இருப்பவர்கள் பின்னூட்டத்தில் குறிப்பிடலாம் ! ) தகவல்கள் கிடைக்கும் அதே நேரத்தில், இதயம் உண்மையிலேயே மன்மத அம்பு துளைத்த ஹார்ட்டின் வடிவத்தில்தான் இருக்கும் என இன்றும் நம்பிக்கொண்டிருக்கும் ரோமியோக்கள் இறவா புகழுக்காக இணையத்தில்  உள்ளிட்ட  தகவல்களும் வந்து விழும் !

ஒரு காலத்தில் அந்தந்த துறை சார்ந்தவர்களுக்கு மட்டுமே கிடைத்த தகவல்களும், நிபுணர்கள் மட்டுமே அறிந்திருந்த செய்திகளும் இன்று சாமானியனுக்கும் இணையம் மூலம் எட்டி விடுகிறது ! அப்படி எட்டும் செய்திகள் வியாதிகளைப் பற்றியது எனும்போது, அவை பலருக்கு தேவையில்லாத மன உளைச்சலை ஏற்படுத்திவிடுகின்றன !


உதாரணமாக, சில வருடங்களுக்கு முன்புவரை தலைவலி என்றால் சரியான தூக்கமில்லை என்போம்... அல்லது வேலைபளு என்போம்... அதுவே சில நாட்கள் தொடர்ந்தால் நேரடியாக மருத்துவரை பார்த்துவிடுவோம்.

இன்று இடைபட்ட நேரத்தில் இணையத்தினால் குழம்பிவிடுவதுதான் பிரச்சனை ! தலைவலி என்று தட்டி பாருங்கள்... தூக்கமின்மை என்ற வார்த்தைக்கு முன்னால் தலை சம்மந்தமான பல நோய்களின் தகவல்கள் முன்னால் பாயும் ! அதுவரையிலும் மருத்துவரை பார்க்கலாம் என நினைத்திருந்தவர் அவசரமாய் அந்த இணையமே விளம்பரம் செய்யும் அதிநவீன மருத்துவமனைக்கு ஓடுவார் !

லஞ்சத்தையும் சேர்த்து பல கோடிகளில் மருத்துவபடிப்பை முடித்து, இன்னும் பல கோடிகள் வங்கி கடன் வாங்கி நவீன மருத்துவமனை கட்டிய மருத்துவர், உங்கள் தலைவலிக்கான காரணம் ஓய்வெடுக்காமல் பேஸ் புக்கில் லைக்ஸ் போட்டுக்கொண்டிருந்ததுதான் என ஒரு வரியில் சொல்லி அனுப்புவதற்கு முன்னால் அத்தனை சோதனைகளையும் முடித்துப் பல ஆயிரம் தொடங்கி ஒரு லட்சம் வரை வாங்கி விடுவார் !

வரும் முன் காப்பது நல்லதில்லையா ?...

நல்லதுதான் ! ஆனால் காப்பதற்கு முன்னால் வந்ததோ இனி வரப்போவதோ என்ன என்று சரியாகத் தெரிய வேண்டுமல்லவா ?!

என்னதான் செய்வது ?

கை கடுப்புக்கான காரணம் ரோஜா பதியனாகவும் இருக்கலாம்... அல்லது இதய நோயின் அறிமுறியாகவும் இருக்கலாம்தான் ! ஆனால் அதனைப் பரிசோதித்து முடிவு செய்ய வேண்டியது " உங்கள் மருத்துவரே " தவிர , இணைய தகவல்கள் அல்ல ! நான் " உங்கள் மருத்துவர் " எனக் குறிப்பிட்டிருப்பதைக் கவனமாக வாசியுங்கள்...

நமக்கென வாடிக்கையான ஒரு பொதுநல மருத்துவர் இருப்பது முக்கியம். அப்படி இருக்கும் பட்சத்தில் உங்களின் தொழில், உணவு பழக்கம், வாழ்க்கை முறை தொடங்கி உங்களுக்கு அடிக்கடி ஏற்படும் உடல்நல குறைவுகள், அதற்கான காரணங்கள் ,நீங்கள்  உட்கொண்ட மற்றும் உட்கொள்ளும் மருந்துகள், அவற்றின் தன்மை என அனைத்தும் அவருக்குத் தெரியும். இந்த தகவல்களின் உதவியாலும், அவரது அனுபவத்தாலும் உங்கள் தலைவலிக்கான காரணத்தை அவர் கண்டுபிடித்துவிடுவார். இல்லையெனில் மேற்கொள்ள வேண்டிய பரிசோதனைகளையோ அல்லது பார்க்க வேண்டிய மருத்துவ நிபுணரையோ அவரே பரிந்துரைப்பார்.

வாழ்க்கையில் அவசர சிகிச்சைக்கான தேவையும் ஏற்படும்தான். தெரியாத மருத்துவரிடமோ அல்லது அவசரமாய் மருத்துவமனைக்கோ போக நேரிடும்தான். அப்படிப்பட்ட சூழலுக்குப் பிறகு அந்த மருத்துவ முடிவுகளைக் குடும்ப மருத்துவரிடம் காட்டி ஆலோசிப்பது முக்கியம்.

அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படுமாயின், கால அவகாசம் இருக்குமானால் குடும்ப மருத்துவரிடமோ அல்லது அவர் பரிந்துரைக்கும் அந்தத் துறை சார்ந்த மற்றொரு மருத்துவ நிபுணரிடமோ ஆலோசித்தல் நலம் !

நலமாய் வாழ்ந்து நாலு பேருக்கு நல்லது செய்வோம் !



பட உதவி : GOOGLE
 
இப்பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். நன்றி.

 

82 comments:

  1. இந்தப் பாழாப்போன உலக்த்தில் வாழ்ந்து என்னத்தை கண்டோம்?
    இதுவரையும் காணாததையா இனிமேல் காணப் ப்போறோம்?
    சாவை ஏன் நாம் எதிரியா நினைக்குறோம்?
    நண்பனாக ஆக்கிக் கொண்டால் என்ன?
    இப்படியெல்லாம் நான் யோசிப்பதுண்டு..

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் வருண்...

      முதல் வருகையோடு தத்துவ கேள்விகளுடனான பின்னூட்டம் !

      சமீபகாலமாக உங்களின் பதிவுகளிலும் பின்னூட்டங்களிலும் வாழ்க்கை பற்றிய கேள்விகள் அதிகம் !

      " சாவை ஏன் நாம் எதிரியா நினைக்குறோம்?
      நண்பனாக ஆக்கிக் கொண்டால் என்ன? "

      ஓஷோவிடம் இந்த கேள்விக்கு உண்மையான விளக்கம் உண்டு !

      ஜே. கிருஸ்ணமூர்த்தியை நீங்கள் நிச்சயம் அறிந்திருப்பீர்கள்... " நான் " என்பதை அவர் விளக்கும் விதமும் படிக்க வேண்டிய ஒன்று !

      " இந்தப் பாழாப்போன உலக்த்தில் வாழ்ந்து என்னத்தை கண்டோம்? "

      சின்சியராக பதில் சொல்ல வேண்டுமானால் ...

      " ஒன்றுமில்லை வருண்... ஒன்றுமேயில்லை ! இதற்கு தான் ஜாதி, மதம், மொழி, பிராந்தியம் என்றெல்லாம் பிரிந்து, சொந்த சகோதரனுக்கு கூட ஒன்றும் கொடுக்காமல் அடித்துக்கொள்கிறோம் ! "

      இது மட்டுமல்ல, எதுவும் கடந்தும் போகும்.... அத்துடன் நாமும் !!!

      நன்றி நண்பரே !



      Delete
  2. சில வருடங்களுக்கு முன்மே என் டாக்டர் என்னை ஸ்வீட்டான கொழுப்பான ஆள் என்று சொல்லி மருந்துதர ஆரமபித்தார் ஆரம்பத்தில் ஒழுங்காக சாப்பிட்டு வந்த நான் கடந்த ஒரு வருடமாக மருந்து சாப்பிடாமல் ஸ்டிரைக் பண்ணினேன். சில வாரங்களுக்கு முன்பு வீட்டாரின் வற்புறுத்தலுக்கிணங்க டாக்டரை பார்த்தேன் அவர் டேய் தமிழா நீ மிகவும் ஸ்வீட்டான கொழுப்பான ஆளாகிவிட்டாய் இப்படி நீ இருந்தால் பதிவுலகத்தில் இருந்து நீ நிரந்தமாகவே காணமல் போய்விடுவாய் என்று எச்சரித்தார். என்மேல் அக்கறையுள்ள நல்ல டாக்டர் அதனால்தான் என் பதிவை படித்துவிட்டு எத்தனை பேர் செத்தாலும் பரவாயில்லை ஆனால் நீ மிகவும் நல்லா இருக்கணும் என்று நினைக்கிறார் அது மட்டுமல்ல நான் சிக்கிரம் போய்விட்டால் அவருக்கு வருமானம் போய்விடுமே என்று கவலை அவருக்கு ஹும்ம்ம்ம்ம்

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் நண்பரே !

      உண்மையை சொல்ல வேண்டுமானால் கொழுப்பும் சர்க்கரையும் கூடிவிட்டாலே நோய் தான் என்ற அர்த்தம் இல்லை ! ஆனால் முறையான அளவான சரியான உணவும், ஓய்வும் அவசியம். ஒரு குறிப்பிட்ட அளவுக்கும் மேலே போகும்போதுதான் பிரச்சனை...

      " என் பதிவை படித்துவிட்டு எத்தனை பேர் செத்தாலும் பரவாயில்லை ஆனால் நீ மிகவும் நல்லா இருக்கணும் என்று நினைக்கிறார் அது மட்டுமல்ல நான் சிக்கிரம் போய்விட்டால் அவருக்கு வருமானம் போய்விடுமே என்று கவலை அவருக்கு ஹும்ம்ம்ம்ம்... "

      இந்த ஹாஸ்ய உணர்வே மாமருந்து நண்பரே... நீண்ட காலம் நிறைய எழுதி எங்களையெல்லாம் உங்கள் அன்பால் கொல்ல வேண்டுகிறேன் !!!

      நன்றி

      Delete

  3. நண்பரே கொழுப்பை நினைத்து கவலைபட வேண்டாம்... வெள்ளைப் பூண்டையோ அல்லது பூண்டு மாத்திரையையோ தினசரி சாப்பிடுங்கள் அதனோடு ஆல்மண்ட் தினசரி சாப்பிட்டு வாருங்கள் அதன் பின் பாருங்கள்

    ReplyDelete
    Replies
    1. உங்களின் அக்கறையான அறிவுரைக்கு நன்றிகள் பல. இன்றே செயல்படுத்த துவங்கிவிட்டேன். முகம் அறியா என்மேல் நீங்கள் கொண்ட அன்புக்கு நன்றி.

      Delete
  4. நண்பரே

    எனக்கு ஜுனூன் தமிழ் நன்கு பரிச்சயம் என்பதால் கட்டுரையை படிப்பதில், புரிந்து கொள்வதில் எந்த பிரச்சினையும் இல்லை.

    ReplyDelete
    Replies
    1. அது.... !

      புரியாத வயசிலேயே ஜூனூன் தமிழ் மொழிபெயர்ப்பு காமிக்ஸுகளை படித்து புரிந்துகொண்டவர்களாயிற்றே நாம் !

      அது சரி விஸ்வா...

      " எனக்கு ஜுனூன் தமிழ் நன்கு பரிச்சயம் என்பதால் கட்டுரையை படிப்பதில், புரிந்து கொள்வதில் எந்த பிரச்சினையும் இல்லை... "

      பாராட்டற மாதிரி என்னை வாரிவிடவில்லையே ?!....

      பின்னூட்டத்துக்கு நன்றி நண்பரே.

      Delete
  5. மெலிவதற்கு முன்பாகவே அப்படியா...?

    சில விசயங்களில் முழுதாக தெரிந்து கொள்வதும் ஆபத்து தான்... அதுவும் நோய்கள் பற்றிய விசயங்களில்... பலருக்கும் சொல்ல பயன்படும்... நமக்கென்றால் + பயம்...

    ஆமாம்... இதனால் தான் பேசவில்லையோ...? காத்திருக்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் வலைசித்தர் அவர்களே...

      ஆமாம்... சும்மாவே நாலு நல்லி எலும்பும் ஒரு பிடி கறியும்தான் என் சொத்து !

      பிரான்சில் தெரு நாய்கள் கம்மி என்பதாலும், ஸ்வெட்டர் கோட் என " வெயிட் " கூட்டிகாட்டுவதாலும் தைரியமாக இருக்கிறேன் !!!

      உங்களை தொடர்பு கொள்ளாததற்கு காரணம் என் வேலை நேரம்... மன்னிக்கவும், மிக விரைவில் தொடர்பு கொள்கிறேன்.

      நன்றி

      Delete
  6. சாம்,

    எதோ மேனேஜ்மென்ட் பற்றி எழுதப் போகிறீர்கள் என்று நினைத்தேன். ஆனால் மிகத் தேவையான பதிவுதான். பாராட்டுக்கள்.

    நிறைய தகவல்கள் அறிந்துகொள்வது ஒரு கட்டத்திற்குமேல் ஒரு சுமையாகி விடுகிறது. அத்தனை தகவல்களையும் வைத்துக்கொண்டு நாம் என்ன ஜூபிடருக்கு ராக்கெட்டா அனுப்பப்போகிறோம் என்று கூட எனக்குத் தோன்றும் சில சமயங்களில். அல்லது உலகையே மாற்றி அமைக்கப்போகிறோமா? ஒன்றுமில்லை. எது தேவையோ அது மட்டும் போதும் என்ற பார்வை ஒன்றே இதற்கு ஒரே தீர்வு.

    மெடிக்கல் படிப்பவர்கள் ஒரு நிலையில் தாங்கள் படித்திருந்த அனைத்து நோய்களும் தங்களுக்கு இருப்பதாக கற்பனை செய்துகொள்வார்களாம். இணையத் தகவல்கள் இன்று பலருக்கும் இதைத்தான் தருகின்றன.

    சரி இதில் என்னதான் இருக்கிறது என்று ஒரு முறை ...ஒரே முறைதான்...ஒரு பத்திரிகை ராசி பலன் படித்ததேன். அத்தனை 12 ராசிக்கும் எழுதியிருந்தது எனக்கு போலவே இருந்தது. அதோடு அந்தப் பக்கமே போவதில்லை.

    சும்மாவா சொன்னார்கள் Ignorance is bliss என்று?

    பதிவின் இடையே என் பெயரில் லிங்க் வேறு கொடுத்திருக்கிறீர்கள். ரொம்ப நன்றி. ஒரு விதத்தில் நீங்கள் சொல்வது உண்மைதான். சில ராக் பாடல்கள் நமது இதயத் துடிப்பை எகிற வைக்கும் குணம் கொண்டவை. சில ஹெவி மெட்டல் வகை பாடல்களைக் கேட்டால் எதையாவது எடுத்துக்கொண்டு யாரையாவது அடித்துத் துவம்சம் செய்யத் தோன்றும். நல்லவேளையாக நான் கதவை சாத்திக்கொண்டு தனியாக பாடல்கள் கேட்கும் ரகம்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் காரிகன்...

      வாழ்க்கையில் எல்லாமே " மேனேஜ்மென்ட் " ஆகிவிட்ட இன்றைய நுகர்வோர் கலாச்சாரத்தில், சில விசயங்களை சொல்ல அந்த விதிகளையே பயன்படுத்தும்படியாகி விடுகிறது !

      "...ஒன்றுமில்லை. எது தேவையோ அது மட்டும் போதும் என்ற பார்வை ஒன்றே இதற்கு ஒரே தீர்வு.... "

      மிக உண்மையான வரிகள் காரிகன் ! தகவல்களுக்காக அலைந்த காலம் போய், அந்த தகவல்கள் மிக எளிதாய், அதிகமாய் கிடைக்கத்தொடங்கி, இன்று " information overload "ஆகிவிடுவது பெரும் பிரச்சனை ! இவற்றில் தொன்னூறு விழுக்காடுகளுக்கும் மேலானவை அன்றாட வாழ்க்கைக்கு தேவையற்றவை என்பதுதான் உண்மை !

      "...அத்தனை 12 ராசிக்கும் எழுதியிருந்தது எனக்கு போலவே இருந்தது.... "

      ஆமாம் நண்பரே ! மிக புத்திசாலித்தனமாக எழுதப்பட்டவை இந்த ராசி பலன்கள்...

      உதாரணமாக, உங்களுக்கு பணத்தேவை அதிகமான வாரம்... வேலையில் சிரமம்... போன்ற வரிகள் ! பணத்தேவை யாருக்குத்தான் இல்லை ? பில் கேட்ஸுக்கும் அவரது தகுதிக்கு ஏற்ப பற்றாக்குறை இருக்கும்தான் ! வேலை சிரமம் இல்லாத மனிதன் உண்டா ?...

      ஆனால் ஒன்றை ஒத்துக்கொள்ளவேண்டும்... " எல்லோருக்கும் எல்லாம் " என்ற சமதர்ம கொள்கை இந்த ராசிபலனில் கட்டாயம் உண்டு !!!

      உங்களின் லிங்க் எழுத்தினூடே இயல்பாய் வந்தது காரிகன் !

      yes my friend... Ignorance is bliss !

      Thank you !

      Delete
  7. அண்ணா வணக்கம்.

    வாழ்வியல் பதிவுகளை நகைச்சுவை இழையோட உங்கள் பாணியில் கொண்டு செல்கிறீர்கள்.
    பொதுவாக, இணையத்தில் இருக்கும் விடங்களின் நம்பகத்தன்மை குறித்தும் நாம் அச்சம் கொள்ள வேண்டி இருக்கிறது.
    வள்ளுவன்,
    நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
    வாய்நாடி வாய்ப்பச் செயல்
    என்பான்.

    வணிக மருத்துவர்கள் முதலில், நோயாளிக்கு உள்ள முதலைப் பார்த்துத்தான் சிகிச்சையை ஆரம்பிக்கிறார்கள்.

    நீங்கள் குறிப்பிட்ட ஜனூன் தமிழ் பற்றி இந்த இடுகையின் திரு S.P. செந்தில்குமார் அவர்களின் பின்னூட்டத்திற்கான பதிலில் இந்தத் தமிழின் பெயரினைக் குறிப்பிடாமல் குறித்திருக்கிறேன்.

    கண்டு கருத்திட வேண்டுகிறேன்.

    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஜோசப்...

      இந்த பதிவினை எழுதி முடித்துவிட்டு, பழைய பதிவுகளை ஒரு முறை படித்தேன்... என் எழுத்தில் சுய பகடியுடன் கூடிய ஒரு பாணி அமைந்திருப்பது உண்மைதான் ! எழுதும்போது என்னையும் மீறி வந்துவிழும் ஹாஸ்ய வரிகள் அவை !

      " மதங்களைப் பற்றியெல்லாம் மானாவாரியாய் வலைப்பூவில் எழுதிவிட்டோமே.... உண்மையிலேயே நரகம் இருந்தால் என்னாகும் என்றெல்லாம் பயந்து...

      அந்த வார இறுதியில் தோழி வீட்டுத் தோட்டத்தில் ரோஜா பதியன்களுக்காக மாங்கு மாங்கென மண் கிளறியது அப்போதுதான் ஞாபகம் வந்தது ! "

      போன்ற வரிகள் தட்டச்சு செய்த அந்த நொடியில், தானாய் வந்தவை என்றால் நம்பமாட்டீர்கள் !

      " வணிக மருத்துவர்கள் முதலில், நோயாளிக்கு உள்ள முதலைப் பார்த்துத்தான் சிகிச்சையை ஆரம்பிக்கிறார்கள்... "

      இவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகுவதுதான் பயம் ஏற்படுத்துகிறது !!!

      ( ஜூனூன் தமிழ் பின்னூட்டத்துக்கு ஒரு நாள் அவகாசம் கொடுங்கள் ஜோசப்...உங்கள் தளத்தில், செந்தில் குமார் போன்றவர்களின் பின்னூட்டத்துக்கான பதிலை ஜாக்கிரதையாக எழுத வேண்டும் அல்லவா ?! )

      நன்றி

      Delete
  8. எதையோ சொல்லி ஆரம்பித்து, எதிலோ கொண்டுவந்து முடித்து, வாசித்த எங்க உச்சி மண்டையில் நச்சுன்னு ஆணி அடிச்சமாதிரி "அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷம்" என்பதை மிகச்சிறப்பாக பதியவைத்தீர்கள்!
    டாக்டர் செரியன், உலகின் மிகச்சிறந்த இருதய அறுவை சிகிச்சை நிபுணர்.
    பிறந்த குழந்தையிலிருந்து முதியவர் வரை பலருக்கும் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சிகிச்சை அளித்து பெயரெடுத்தவர்.
    கடைசியில் தன் மருத்துவமனை மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டவர்.
    பலரின் சாவை தள்ளி வைத்தவர்
    தன் சாவை தானே நிர்ணயத்திக்கொண்டவர்

    ReplyDelete
    Replies
    1. உங்களின் பாராட்டு வார்த்தைகளுக்கு நன்றிகள் பல.

      இதய நோய் நிபுணர் செரியனை பற்றி அழகாய் செதுக்கிய வார்த்தைகளினால் அருமையாக விளக்கிவிட்டீர்கள் ! ஆமாம், அவரின் தற்கொலை முடிவு மருத்துவ உலகுக்கு பேரிழப்பு

      தொடர்ந்து வருகை தாருங்கள்.

      நன்றி

      Delete
  9. தலைப்பைக் கண்டு பயந்துவிட்டோம். உள்ளே செல்லச் செல்ல பயனுள்ளவற்றை அறிந்தோம். அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்னையை அலசியுள்ள விதம் அருமை.

    ReplyDelete
    Replies
    1. அய்யா,

      சற்றே வித்யாசமாய் தலைப்பிடலாம் என யோசித்தபோது இப்படி தோன்றிவிட்டது ! தங்கள் வருகைக்கும் வார்த்தைகளுக்கும் நன்றி அய்யா.

      Delete
  10. நோய் வந்தால் மருத்துவரை நாட வேண்டும்! இணையத்தில் மேய்ந்து சுய வைத்தியங்கள் செய்தால் பயம்தான் அதிகமாகும் என்று சொல்லிவிட்டீர்கள்! உண்மைதான்! தேவைக்கு அதிகமாகவே இணையத்தில் தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன! அவை நம்மை கொட்டியும் பார்க்கின்றன! மிக அருமையான பதிவு! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் நண்பரே...

      தேவைக்கு அதிகமானவை நமது இதய துடிப்பையும் எகிற வைத்துவிடுவது சில சமயங்களில் சங்கடமாகிவிடுகிறது !

      தங்களின் பின்னூட்டத்துக்கு நன்றி

      Delete
  11. முன்பு ரேடியோவில் நல்வாழ்வு நிகழ்ச்சி வரும். அதைக் கேட்பவர்களுக்கு அவர்கள் சொல்லும் சிம்டம்ஸ் தனக்கும் இருப்பதாகவே தோன்றும். அதுபோலத்தான் இதுவும். முன்பெல்லாம் கீழே விழுந்து கையோ காலோ வீங்கி விட்டால் கொஞ்ச நாளில் சரியாகி விடும் என்று விட்டு விடுவோம். இப்போதோ? எக்ஸ்ரே எடுத்து, எம் ஆர் ஐ எடுத்து, ப்ளேட் வைக்கலாமா, ஸ்பூன் வைக்கலாமா என்று பயந்து....! டெக்னாலஜி! நமக்கும் அதெல்லாம் பார்த்து விட்டால் ஒன்றுமில்லை என்று தெரிந்துகொண்டுவிட்டால் நிம்மதியாக இருக்குமே என்று தோன்றுவதையும் தவிர்க்க முடியவில்லை!

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் ! அன்று அவ்வப்போது ரேடியோ செய்திகளை கேட்டோம்... இன்றூ நாள் முழுவதும் இணையம் !

      " நமக்கும் அதெல்லாம் பார்த்து விட்டால் ஒன்றுமில்லை என்று தெரிந்துகொண்டுவிட்டால் நிம்மதியாக இருக்குமே என்று தோன்றுவதையும் தவிர்க்க முடியவில்லை! "

      சில நேரங்களில் இந்த நியாயமான பயத்தை வியாபார நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள தொடங்கிவிட்டதுதான் பிரச்சனை !

      தங்கள் வருகைக்கு நன்றி

      Delete
  12. வணக்கம் நண்பரே நலம்தானே காலையிலேயே வந்தேன் தலைப்பை படித்தும் சரி இது ஏதோ சைனாப்பார்ட்டி என்று போய் விட்டேன் பிறகு கூர்ந்து பார்த்த பிறகுதான் தெரிந்தது இது ஈபிள் என்று நல்லதொரு விடயத்தை என்னைப்போன்றவர்களுக்கு பயனுள்ளதாக கொடுத்தமைக்கு நன்றி நண்பரே... தொடர்ந்து நல்ல பதிவுகளை தொடுப்பீரே... நம்ம வூட்டாண்டே அடிக்கடி வந்து போகவும் இன்று எமது முக்கியமான பதிவு.

    ReplyDelete
    Replies
    1. நலம்... தங்கள் நலம் அறிய ஆவல் நண்பரே !

      நல்ல வேலை... இது made in china efel tower என இருந்துவிடாமல் திரும்பி வந்தீர்களே... உங்கள் வீட்டை மறக்க முடியுமா நண்பரே... அன்பு தொல்லையை அடிக்கடி தொடருகிறேன் !

      நன்றி

      Delete
  13. இணையத்தகவல்கள் நம்மை அரைகுறை மருத்துவராக்கி விடுகின்றன என்பதை மிகவும் அழ‌காய்ச் சொல்லியிருக்கிறீர்கள். உண்மை தான்! பிரச்சினைக‌ள் இணையத்தினால் மட்டும் வருவதல்ல, நமது கற்பனையினாலும் வருவது தான். அதிக வயிற்று வலியை கவனிக்காமல் போனதால் ஒருவர் கான்ஸரால் இறந்து போனார் என்ற விபரம் தெரிய் வந்ததிலிருந்து சாதாரண வயிற்று வ‌லி வந்தால் கூட கான்ஸர் நினைவு வருவ்து இயல்பாகிப்போகிற்து.

    நீங்கள் சொல்லியிருக்கும் ' குடும்ப மருத்துவர்' என்ற விஷயம் ஒவ்வொருத்தருக்கும் மிகவும் முக்கியம். இதை நான் பல முறைகள் என் பதிவுகளில் வற்புறுத்தியிருக்கிறேன்.

    கொலஸ்ட்ரால் எப்போது அதிகம் என்று தெரிகிறதோ அப்போதிலிருந்து உடல் நலம் பேணுவதில் கவனம் தேவை. சர்க்கரையும் இரத்த அழுத்தமும் அதன் உடன் பிறந்தவர்கள். அதனால் தினமும் நடைப்பழ‌க்கம் அவ‌சியம். அசைவ உணவுகள், நெய் இவைகளைத்தவிர்த்து, காய்கறிகள், பழங்களை அதிகம் உண்ண‌ வேண்டும். தினமும் கொழுப்பு நீக்கிய பாலில் ஐந்தாறு பூண்டு பற்களை வேக வைத்து சாப்பிட்டு வந்தால் மிகவும் நல்லது.

    ReplyDelete
    Replies
    1. அம்மா,

      உங்களின் வருகை மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது...

      அந்த தேவையற்ற கற்பனைகளுக்கு ஊற்றாய் இணைய தகவல்கள் மட்டுமன்றி இன்றைய ஊடக தகவல்கள் அனைத்துமே அமைந்து விடுகின்றன !

      இயற்கை மருத்துவ குறிப்புகளுக்கு மனமார்ந்த நன்றி அம்மா.

      இணையத்தில் தேவையற்றவைகளும் இருந்தாலும் உங்களை போன்றவர்களின் அனுபவ அறிவு அனைவருக்கும் எட்ட காரணமும் இணையம் தான் இல்லையா ?!

      நன்றிகள் பல

      Delete
  14. அருமை நண்பரே
    இணையத் தகவல்கள் நம்மை அரைகுறை மருத்துவராக்கி விடுகின்றன என்பதுஉண்மைதான்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அய்யா,

      " இணையத் தகவல்கள் நம்மை அரைகுறை மருத்துவராக்கி விடுகின்றன என்பதுஉண்மைதான்... "

      அதே நேரத்தில் உங்களை போன்றவர்களின் அறிவு சேவையும் இணையத்தினால்தான் எங்களுக்கு கிட்டியது என்பதும் உண்மை அய்யா.

      நன்றி

      Delete
  15. ம்..ம். நம்ம நாட்டு சாப்பாடு நம்ம நாட்டிற்கு தான் உகந்தது நாம் அதையே இங்கும் உண்பதால் தான் இந்நிலை பச்சை இலைகுளைகளை சாப்பிட்டு விட்டு 30நிமிடம் ஏனும் நடந்து வந்தால் பிரச்சனைகள் குறைவு என்று எண்ணுகிறேன். நாமும் இதற்கு விதிவிலக்கல்ல. கொழுப்பு இனிப்பு இருந்தா பணக்கார வருத்தமாமே அதனால் சொஞ்சம் மகிழ்ச்சியாக இருக்கிறோம்(. நீங்க வேற வயிற்றெரிச்சலைக் கிளப்பாதீங்க) இணையங்களை தேடித் தேடித் பார்த்து இருக்கிற வருத்தத்தையும் கூட்டிக் கொள்வோம். இதையெல்லாம் பார்த்து விட்டு என் கணவர் னோ carb னோ salt னோ spice ஏன்று இருக்கிறார். ஒன்லி veg தான். இதை யறிந்தால் டாக்டர்களுக்கு கொண்டாட்டம் தான் நிரந்தர கஷ்டமர்கள் கிடைத்தது விட்டார்கள் என்று ஹா ஹா ... ஆனாலும் வீட்டிலேயே மருந்துகள் உள்ளன என்றாலும் கேக்க மாட்டோம் ஏதாவது கை வயித்தியம் சொன்னால் இவ பெரிய டாக்டர் என்று கேலி பண்ணுகிறார்கள். ஆனல் கை வையித்தியமும் கை கொடுக்கத் தான் செய்கிறது. என்பது நான் கண்ட உண்மை. நம்பிக்கையும் வேண்டும் அல்லவா. . உள்ளி இஞ்சி ஆரஞ்சு கொழுப்பை கரைக்க உதவும் தான். நன்றி பதிவுக்கு

    ReplyDelete
    Replies
    1. " நம்ம நாட்டு சாப்பாடு நம்ம நாட்டிற்கு தான் உகந்தது "...

      மிகவும் உண்மை சகோ ! அந்தந்த பிரதேசத்தின் சீதோசன நிலைக்கு ஏற்ப அமைந்த உணவு பழக்கம் வேறு பிரதேசத்தில் சில உபாதைகளை உண்டும் பண்ணும் வாய்ப்புகள் உண்டு !

      " கொழுப்பு இனிப்பு இருந்தா பணக்கார வருத்தமாமே அதனால் சொஞ்சம் மகிழ்ச்சியாக இருக்கிறோம்(. நீங்க வேற வயிற்றெரிச்சலைக் கிளப்பாதீங்க) "

      உண்மை ! உண்மை ! உண்மை !!!

      " ஆனல் கை வையித்தியமும் கை கொடுக்கத் தான் செய்கிறது. என்பது நான் கண்ட உண்மை. நம்பிக்கையும் வேண்டும் அல்லவா ! "

      ஆமாம் சகோ... நம்பிக்கைதானே அனைத்துக்கும் அடிப்படை ?!

      வருகைக்கு நன்றி சகோ !

      Delete
  16. ஆம் நண்பரே! இணையத் தகவல்க்ள் பல நம்மை புத்தி பேதலிக்கவைத்துவிடும்! குறிப்பாக மருத்துவ விளக்கங்கள்! அதுவும் நாம் சரியாக கூகுளில் தேடவில்லை என்றால். கூடுதல் தகவல்கள் பற்றி நீங்கள் சொல்லி இருப்பது மிகவும் உண்மையே. ஒன்று நாம் மருத்துவர்கள் தரும் (நம்பகமான மருத்துவர்கள்) மருந்துகளை நாம் நம்பிக்கையோடு சாப்பிட வேண்டும். நம்பிக்கை என்பது மிகவும் முக்கியம். இங்கு நமது அளவுக்கு மீறிய அறிவு இடைப்பட்டால், தேவையில்லாத கேள்விகளைக் கேட்கும். பின்னர் ஆராயத் தொடங்கும். விளைவு ? குழப்பம். எனவே சில விஷயங்களில் நாம் நமது அறிவை கொஞ்சம் புறம் தள்ளி வைத்துவிட்டு, நம்பிக்கையுடன் மருத்துவக் குறிப்புகளை ஃபாலோ செய்தால் நல்லது. அதற்கு மீறியும் ஏதேனும் நடந்தால் அது நம் கையில் இல்லை. (டாக்டர்கள் படங்களில் கண்ணாடியைக் கழற்றிக் கொண்டே கையை மேலே காட்டுவார்களே அப்படித்தான்!!)

    நண்பரே! மருத்துவர் சொல்லுவதை நீங்கள் சொல்லி இருப்பது போல் ஃபாலோ செய்யுங்கள். கூடவே க்ரீன் டீ சர்க்கரை, தேன் எதுவும் சேர்க்காமல் தினமும் இரு முறை குடித்துப் பாருங்கள் நிச்சயமாக குணம் கிடைக்கும். பூண்டு....வெந்தயம் சிறிது முதல் நாள் இரவு சிறிது தண்ணீரில் ஊற வைத்து மறு நாள் காலை வெறும் வயிற்றில் அதை அப்படியே முழுங்கினால் இது , சுகர், கொழுப்பு, ரத்த அழுத்தம் மூன்றையும் குணப்படுத்தும் என்று எங்கள் ஆயுர்வேத மருத்துவர் சொல்லுவார். முடிந்தால் முயற்சி செய்து பாருங்கள். பச்சைத் தேனீர் நல்ல எஃபக்ட் இருக்கின்றது.

    மிக நல்ல பதிவு நண்பரே!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஆசானே...

      (டாக்டர்கள் படங்களில் கண்ணாடியைக் கழற்றிக் கொண்டே கையை மேலே காட்டுவார்களே அப்படித்தான்!!)

      நகைச்சுவை என்றாலும் அப்பட்டமான யதார்த்ததை அழகான சொல்லியுள்ளீர்கள் ! டாக்டர் மேலே தூக்கும் "கை"யை விட முக்கியமானது " நம்பிக்கை " !... நல்லதை நினைப்பது நிச்சயம் நன்மையே பயக்கும்.

      ஆசான் அவர்களே... சொந்த அனுபவங்களின் வாயிலாக வாழ்க்கையை புரிந்துகொள்ள விடாது முயற்சிப்பவன் நான்.... அந்த வகையில் அமைந்ததே இந்த பதிவும். இதற்கு பின்னூட்டமாய் உங்களை போன்றவர்களின் அக்கறையான மருத்துவ குறிப்புகளையும், வார்த்தைகளையும் படிக்கும்போது, முகமற்ற என்மீது நீங்களெல்லாம் கொண்ட அக்கறை நெகிழச் செய்கிறது...

      இதையும் சாத்தியமாக்கியது இணையம் தானே ?!

      நன்றிகள் பல

      Delete
  17. குடும்ப டாக்டர் என்னும் கான்செப்ட் இன்னும் இந்தியாவில் வளரவில்லை... அதனால் தான் மருத்துவமனைகள் கொழிக்கின்றன....

    ReplyDelete
    Replies
    1. நான் இந்த பதிவில் எழுத நினைத்து, விடுபட்டதை குறிப்பிட்டதற்கு நன்றி சகோ !

      நம்மவர்களுக்கு வாடிக்கை டாக்டரை விட " ஓவர் டோஸ் " மருந்தில் ஒரு நாளில் குணம் காட்டும் " வேடிக்கை டாக்டர் " மீதுதான் மோகம் அதிகம் !!!

      மேலை நாடுகளில் கட்டாயமான இந்த வழக்கம் நம் நாட்டிலும் வர வேண்டும் !

      நன்றி சகோ !

      Delete
  18. நண்பர் சாமானியரே!
    நாற்பது வயதில் நாய் குணம் என்று சொல்லுவார்கள்!
    ஆனால்?
    நீங்களோ நாற்பதை கடக்கும்போது பாய் போட்டு படுத்துக் கொண்டே
    ஹாயாக பதிவெழுதி ஜெயித்துக் காட்டுகிறீர்களே அது எப்படி?
    கொஞ்சம் செப்படி?
    மண்ணைத் தோண்டி ரோஜாவை பதியம் செய்வார்கள்!
    ஆனால்? நீங்களோ மண்ணைத் தோண்டியதை பதிவாக்கி
    வாசகர் மனதில் ரோஜாவாக அல்லவா? வாசம் வீசுகிறீர்கள்!
    இணையத்தின் இந்திரக் குதிரையில் பவனி வரும் இந்த இனிய பதிவு
    மக்களின் மந்திர புன்னகையில் சிறக்கும், பறக்கும் !
    இணையம் தரும் மருத்துவ விடயம்
    துணையாக நிற்கட்டும்!
    வீண் வினையாக மாறுதல் வேண்டாம் என்னும் தெளிவினை
    தந்தீர் சாமானியரே!
    மொத்தத்தில் இந்த பதிவு!
    இதயத்தின்
    டிக், டிக்,டிக்
    மனதில்
    டச், டச், டச்!
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் நண்பரே...

      உண்மையில் நாற்பது வயது ஆணுக்கு நாய் குணம் அவசியம் தேவை அய்யா... நாயின் நல்ல குணங்கள்... இத்தனைகாலம் நாம் உழைத்த தொழிலுக்கு நன்றியுடன் இருத்தல்... தோளுக்கு மேல வளர தொடங்கிவிட்ட பிள்ளைகளுக்கு நல்ல காவலாய் இருத்தல்... சரிதானே நண்பரே ?

      நீங்கள் சொன்ன " செப்படி " அறுபதிலும் ஓடிக்கொண்டே பதிவெழுத வைக்க வேண்டும் என்பதே என் ஆசை !

      " இதயத்தின்
      டிக், டிக்,டிக்
      மனதில்
      டச், டச், டச்! "

      இதயத்தின் " லப் டப்பை " எகிற வைக்காத பதிவாக இருக்கும்வரை நல்லது !

      உங்களின் உளமார்ந்த பாராட்டுதல்களுக்கு நன்றி நண்பரே !

      Delete
  19. அதிகமான தகவல்கள் குழப்பத்தை ஏற்படுத்தும் என்பது உண்மைதான்
    அதீத எச்சரிக்கை உணர்வும் ஆபத்தானது
    நல்ல பதிவு . சிறப்பான எழுத்து நடை

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்,

      அதீத எச்சரிக்கையும் சில வேலைகளில் வீண் குழப்பங்களை ஏற்படுத்திவிடும் ! உதவ தேவையான தகவல்களால் குழப்பம் எனும்போது சட்டென நிறுத்திக்கொள்ள பழகிவிட்டால் நன்மை !

      வருகைக்கு நன்றி நண்பரே

      Delete
  20. முதலில் தலைப்பைக் படித்து புரியாமல் குழம்பித்தான் போனேன் அன்பரே!!!.. பிறகு....குழம்ப வேண்டாம் அன்பர்களே ! “சில பிரிவினருக்கு மட்டுமே சாத்தியமாக இருந்த தகவல்களும், பொது அறிவும் இன்று உலகின் கடைக்கோடி மனிதனுக்கும் கிடைப்பதற்குக் காரணம் இணையமே !” இதற்கு நானும் ஒரு அத்தாட்சி...”””.........

    ReplyDelete
  21. உங்களுடன் சேர்த்து நானும்தான் தோழரே !... எனது அறிவெல்லாம் கேள்வி ஞானம் மட்டுமே !

    வருகைக்கு நன்றி நண்பரே...

    ReplyDelete
  22. நலமாய் வாழ்ந்து நாலு பேருக்கு நல்லது செய்வோம் !-----நன்றி!!

    ReplyDelete
  23. அன்புள்ள அய்யா,

    ‘ த்ரோ தேம்பெர்மாசியோன் துய் லேம்பெர்மாசியோன் ! ’ இந்தப் தலைப்பைப் பார்த்வுடன் ஒன்றும் புரியாதத் தலைப்பாக இருக்கிறதே என்று உள்ளே செல்லவில்லை என்பதை முதலில் சொல்லி விடுகிறேன். அதன் பிறகு தாங்கள் தளம் செல்ல வேண்டிபொழுதுதான் உள்ளே சென்று பார்க்கலாம் என்று சென்றேன். " அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு " என்பதை நன்கு உணர்ந்து சொல்லியிருக்கிறீர்கள் என்பது புரிந்தது.

    ‘ பதறாத காரியம் சிதறாது ’ என்ற பழமொழி ஞாபகம் வந்தது. ரோஜா பதியன்களுக்காக மாங்கு மாங்கென மண் கிளறியது அப்போதாவது ஞாபகம் வந்ததே!

    “ நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்

    வாய்நாடி வாய்ப்பச் செயல்”
    -வள்ளுவரும் மருத்துவர்தான். நீங்க அவரிடம் கேட்டால் சொல்லியிருப்பாரே...!

    சின்னச் சின்னச் விஷயங்களுக்காக கவலைப்பட வேண்டாம்.

    ‘சின்ன நூல்கண்டா நம்மைச் சிறைப்படுத்துவது’

    சம்சாரி வேண்டுமானல் பயந்து கொண்டு இருக்கலாம்.... சாமானியன் பயப்படலாமா?

    ‘காலனே வாடா... உன்னைக் காலால் மிதிக்கிறேன்’ என்றானே பாராதி... அவன் இன்னும் நம்முடன் வாழ்ந்து கொண்டுதானே இருக்கிறான்.

    ‘எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை’ - என்ற கவிஞயரசர் கண்ணதாசன் சொன்னானே... அவனும் இன்னும் மரிக்கவில்லை... வாழ்ந்து கொண்டுதானே இருக்கிறான்.

    ‘எங்கே வாழ்க்கை தொடங்கும்- அது
    எங்கே எவ்விதம் முடியும்?
    இதுதான் பாதை; இதுதான் பயணம்
    என்பது யாருக்கும் தெரியாது
    பாதையெல்லாம் மாறி வரும்
    பயணம் முடிந்து விடும்.’



    ‘அட என்னடா பொல்லாத வாழ்க்கை...

    இதுக்குப் போயி அலட்டிக்கலாமா? ’

    -என்று கண்ணதாசன் வரிகளைச் சொல்லலாம் என்று எண்கின்ற பொழுது...

    தாங்கள் இந்த வரியை முனுமுனுப்பது கேட்கிறது...

    “பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும்

    பார்த்து நடந்தால் பயணம் தொடங்கும்”

    வாழ்க்கைப் பயணம் தொய்வின்றி தொடரட்டும்...!

    வாழ்த்துகள்.

    நன்றி.




    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் அய்யா !

      " இந்தப் தலைப்பைப் பார்த்வுடன் ஒன்றும் புரியாதத் தலைப்பாக இருக்கிறதே என்று உள்ளே செல்லவில்லை என்பதை முதலில் சொல்லி விடுகிறேன்... "

      உள்ளதை உள்ளபடி சொன்னதற்கு நன்றி !

      சாதரணமாகவே நான் சொல்ல வருவது எனக்கே புரியாது... இதில் இப்படியெல்லாம் எழுதினால் என்னதான் செய்வீர்கள் ?

      " என்னம்மா... இப்படி பண்றீங்களேம்மா ! "

      என நீங்கள் புலம்புவது கேட்கிறது

      வாழ்க்கை அனுபவமும் கற்பனையும் கலந்ததுதான் எழுத்து படைப்பு. ஒரு படைப்பில் இந்த இரண்டின் சதவிகிதம் அதை எழுதியவருக்கு மட்டுமே தெரியும். இந்த பதிவில் என் விபரங்கள் உண்மையென்றாலும் சுவாரஸ்யம் வேண்டி சில பயங்கள் மிகைப்படுத்தப்பட்டிருப்பதும் உண்மை !

      குறள் தொடங்கி பல நல்ல பாடல்கள் வரை பின்னூட்டமிட்டு என் நலம் நாடும் உங்களை போல பலரும் இந்த பதிவின் பின்னூட்டமாய் என் நலம் வாழ்த்தியதை படிக்கும்போதெல்லாம் கண்கள் பனிப்பது உண்மை !

      உங்களுக்கெல்லாம் நன்றி என்ற ஒரு வார்த்தை மட்டும் போதாது...

      ஒன்றாய் தொடருவோம் ! நாம் செல்லும் இடமெல்லாம் நம் நிழலாய் அன்பை விதைப்போம் !


      Delete
    2. அன்புள்ள அய்யா,

      ‘சந்திப் பிழையின்றி எழுதுவோம்...’ அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை அய்யா! இராமர் பாலம் கட்ட அணில் உதவி செய்ததாகக் கதை சொல்வார்களே (அவ்வாறு நடக்க வாய்ப்பில்லை என்றாலும்கூட) அதுபோல ஒரு சிறிய முயற்சி. இராமர் போல நண்பர் விஜு அய்யா... அணில் போல அடியேன்...!

      ‘நான் பாடும் பாடல்’ திரைப்படத்தில் ஒரு காட்சியின் வசனம் எனக்கு மிகவும் பிடிக்கும்.


      விதவையான அம்பிகா... அவளின் மாமனார் கோபாலகிருஷ்ணன்... சிவக்குமார் அவளுக்கு உதவிகள் செய்து நண்பர்களாகப் பழகிக்கொண்டு இருக்கின்ற பொழுது, அம்பிகாவிற்கு வாழ்வு கொடுக்க எண்ணி விதவையான அவளின் நெற்றியில் குங்குமத்தை வைத்து தன் உள்ளக்குறிப்பை வெளிப்படுத்தி விடுவான். உடனே ஓங்கி அவனது கன்னத்தில் அறைந்துவிடுவாள்-

      மாமனார் கோபாலகிருஷ்ணன் அப்பொழுது பேசும் வசனம்...

      “ஒன்ன தொட்டுட்டார்ன்னு அடிச்சிட்டா... ஆனா நீ

      அடிக்கும்போது அவர தொட்டுட்டா...”

      -திரு.ஆர்.சுந்தர்ராஜன் எழுதிய வசனங்களில் நான் இரசித்தது.

      இலக்கணம் சொல்லிக் கொடுப்பதாக சொல்லிக் கொண்டாலும்... சொல்லும் போது நான் கற்கிறேன்.

      -மிக்க நன்றி.

      Delete
    3. " இலக்கணம் சொல்லிக் கொடுப்பதாக சொல்லிக் கொண்டாலும்... சொல்லும் போது நான் கற்கிறேன்."

      அய்யா,

      உங்களின் பக்குவம் அனைத்துக்கும் உதாரணமான வரிகள் !

      கற்கும்வரைதான் வாழ்க்கை ! கற்பதை நிறுத்தினால்...

      நன்றிகள் பல அய்யா, நட்புடன் தொடருவோம் !

      Delete
  24. வாழ்த்துரை நல்ல மக்கள்.

    ஒன்றாக நாம் உங்கள் கனவு, திட்டம், கல்வி, கட்டுமான மற்றும் வணிக ஒரு உண்மை செய்ய முடியும் ......
    நாம் சர்வதேச நிறுவனங்கள், பெரிய அளவில் மற்றும் உள்ளூர் லிமிடெட் நிறுவனத்தின் அத்துடன் தனிப்பட்ட நுகர்வோருக்கு கடன் வழங்கும் பல்வேறு.
    எங்கள் கடன் தொகுப்பு நீண்ட அல்லது சிறிய கால இருக்க முடியும், விருப்பங்களை நீங்கள் விரும்பும்.
    போன்ற நம் கடன் சூத்திரம் உதவியாளர் இன்று தேர்வு:
    கல்வி
    வணிக
    கடன் ஒருங்கிணைப்பு
    சொத்து முதலீட்டு
    கடன் காணியொன்றை
    சொத்து வளர்ச்சி போன்றவை தேவையான நிதி வேகமான மற்றும் திறமையான பெற.
    குறிப்பு; இல்லை இணை எங்கள் கடன் விண்ணப்பிக்க தேவையான நாங்கள் உங்கள் கருத்துக்களை உருவாக்க 3% குறைந்த வட்டி விகிதம் வழங்க உள்ளது.
    மின்னஞ்சல் வழியாக இன்று எங்களை தொடர்பு: emilysharifloanfirm@gmail.com மற்றும் emilysharif@loan.com
    எங்கள் தொழில்முறை அணி நீங்கள் ஒரு நல்ல புகழ், எந்த கெட்ட கடன் பதிவு, மற்றும் கடன் நிறைய இருந்தால் நீங்கள் திட்டமிடப்பட்டது கடன் கட்டமைக்க முடியும்.

    நன்றி
    எமிலி ஷெரீப் கடன் வழங்கும் பார்ம்

    ReplyDelete
    Replies
    1. வலைநட்புகளே....

      இந்த பதிவில் நான் குறிப்பிட்ட ஜூனூன் தமிழுக்கு விளக்கமாய் இப்படி ஒரு ஜூனூன் தமிழ் பின்னூட்டமே வரும் என நினைக்கவில்லை ! எல்லாம் கூகுள் மொழிப்பெயர்ப்பானின் புண்ணியம் !!!

      முகவரி, முக அடையாளம் எதுவுமற்ற எனக்கே கடன் சிபாரிசா ? .... இப்படியே விட்டால் ஆவிகளுக்கும் விசிட்டிங் கார்டு கொடுக்க கிளம்பிவிடுவார்கள் போலிருக்கே...

      தொலைபேசி, அலைபேசி தொடங்கி வலைத்தளம்வரை இந்த விளம்பரதாரர்களின் தொல்லை தாங்கமுடியலேப்பா !

      சரி,

      எமிலி ஷெரிப் அவர்களே...

      எனது வலைப்பூ தொழிலை (!) விருத்தி செய்ய ஒரு கோடி யூரோ டாலர்கள் மட்டுமே தேவை. பணையமாய் என் படைப்புகளை வைத்து கொண்டு கடனுக்கு ஆவண செய்தால் மிகுந்த நன்றியுள்ளவனாக இருப்பதோடு உங்கள் பெயரையே என் வலைப்பூவிற்கு வைப்பதாய் உறுதி கூறுகிறேன்.

      என் விபரங்கள்...

      சாமானியன்
      தொழில் : தமிழில் கிறுக்குவது
      முகவரி : கேர் ஆப் கூகுள், உலகளாவிய இணையம்.

      நன்றி ! நன்றி ! நன்றி.... வணக்க்க்கம் !!!

      Delete
  25. பயனுள்ளப் பதிவு சகோ..நீங்கள் சொல்லியிருப்பது போல இணையத்தில் பார்த்தால் பயம் தான் அதிகமாகும். சில வருடங்களுக்கு முன் நான் அப்படிப் பார்த்து அரண்டு மிரண்டு இப்பொழுதெல்லாம் மெடிகல் விசயங்கள் இணையத்தில் பார்ப்பதில்லை. டிஜிட்டல் ஜன்க் அதிகம் என்றே தோன்றுகிறது.

    ReplyDelete
    Replies
    1. " டிஜிட்டல் ஜன்க் அதிகம் என்றே தோன்றுகிறது... "

      இணையத்தில் குப்பைகளை கழிக்கும் வசதி மிக குறைவு என்பதால் உண்டாகும் நிலை ! அந்த " ஜன்க் " ல் நிறைய DIGITAL GEMS இருக்கின்றனதான் !

      நன்றிகள் பல

      Delete
  26. அன்பு நண்பரே...
    வணக்கம்!
    மன்மத ஆண்டில் மகுடம் சூடி மகிழ்வு பெறுக!
    இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்
    நட்புடன்,
    புதுவை வேலு

    சித்திரைத் திருநாளே!
    சிறப்புடன் வருக!

    நித்திரையில் கண்ட கனவு
    சித்திரையில் பலிக்க வேண்டும்!
    முத்திரைபெறும் முழு ஆற்றல்
    முழு நிலவாய் ஒளிர வேண்டும்!


    மன்மத ஆண்டு மனதில்
    மகிழ்ச்சியை ஊட்ட வேண்டும்!
    மங்கலத் திருநாள் வாழ்வில்!
    மாண்பினை சூட வேண்டும்!

    தொல்லை தரும் இன்னல்கள்
    தொலைதூரம் செல்ல வேண்டும்
    நிலையான செல்வம் யாவும்
    கலையாக செழித்தல் வேண்டும்!

    பொங்குக தமிழ் ஓசை
    தங்குக தரணி எங்கும்!
    சீர்மிகு சித்திரைத் திருநாளே!
    சிறப்புடன் வருக! வருகவே!

    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. நண்பரே !

      மன்மத ஆண்டின் தொடக்கத்தில் நீங்கள் வழங்கிய வாழ்த்துக்கு ஆண்டின் மத்தியில் ( ?!!! ) நன்றி நவில்கிறேன்.... மன்னிக்கவும் ! எல்லோரும் எல்லா வளமும் பெற்று வாழ பிரார்த்திக்கிறேன்.

      Delete
  27. ரோஜாக்கள் பூத்துவிட்டதா?
    உண்மையில் உங்கள் மருத்துவர் மிக நல்லவர்.
    வாழ்த்துக்கள்
    உடல் நலம் பேணுக

    ReplyDelete
    Replies
    1. உண்மையிலேயே ரோஜாக்கள் நிறைய பூத்து சிரிக்கின்றன... உங்களை போன்ற முகம் தெரியாத நல்ல உள்ளங்களின் வெளிச்சத்தை போல !

      மனம் நெகிழ்ந்த நன்றி

      Delete
  28. Replies
    1. New post arrived after two months !!! என் மீதான உங்களின் அக்கறைக்கு நன்றி காரிகன்.

      Delete
  29. அவசர கடன் வேண்டும்?
    * உங்கள் வங்கி கணக்கில் மிகவும் வேகமாக மற்றும் அவசர பரிமாற்ற
    நீங்கள் பணத்தைப் பெற்ற பின்னர் * கொடுப்பனவு எட்டு மாதங்கள் ஆரம்பித்தது உங்கள்
    வங்கி கணக்கு
    * குறைந்த வட்டி விகிதங்கள் 2%
    * நீண்ட கால கொடுப்பனவு ( 1-30 ஆண்டுகள்) கால
    * நெகிழ்வான கடன் விதிமுறைகளில் மற்றும் மாதாந்திர பணம்
    * . எப்படி நீண்ட அதை நிதி எடுக்கும்? ஒரு கடன் விண்ணப்பம் பதிவு செய்த பின்னர்
    நீங்கள் எதிர்பார்க்க முடியும் என்று 24 மணி நேரத்திற்கும் குறைவாக ஆரம்ப நடவடிக்கையாக மற்றும்
    நாம் வேண்டும் தகவல் கிடைத்ததும் 72-96 மணி நேரத்திற்குள் நிதி
    நீங்கள் .

    முறையான மற்றும் உரிமம் பெற்ற கடன் நிறுவனத்தின் அதிகாரி தொடர்பு
    மற்ற நாடுகளில், என்று நிதி உதவி .
    இப்போது தொடர்பு மூலம் மேலும் தகவலுக்கு , கடன் விண்ணப்பம்

    மின்னஞ்சல்: maryrobert422@gmail.com

    ReplyDelete
    Replies
    1. உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ! அடடடா..... தாங்க முடியலையே !

      Delete
  30. ஜுனூன் தமிழ் , டாக்டர் செரியன் என என் கல்லூரி நாட்களை நினைவு படுத்துகிறீர்கள் அண்ணா! நான் கேட்க நினைக்கும் கேள்வியை மது ஏற்கனவே கேட்டுவிட்டார்:) தலைப்பை பார்த்தே மலைத்துபோனேன்:))) உண்மைதான் அண்ணா ! இப்போதெல்லாம் கைவைத்தியம், first aid என யோசிக்கவே முடிவதில்லை. உடனே ஆன்லைன் ஆலோசனைகள், பயம், பதட்டம். எதை , எப்படி, எப்போ சொல்லனும்னு உங்ககிட்ட ஒரு கிளாஸ் வரணும் அண்ணா, அருமை:)

    ReplyDelete
    Replies
    1. மதுவுக்கு கொடுத்த பதிலே உங்களுக்கும் சகோ !...

      உண்மையிலேயே ரோஜாக்கள் நிறைய பூத்து சிரிக்கின்றன... உங்களை போன்ற முகம் தெரியாத நல்ல உள்ளங்களின் வெளிச்சத்தை போல !

      இன்றைய மருத்துவ ஆலோசனைகள் என் பதிவின் தலைப்பை போல தலைசுற்றத்தான் வைத்துவிடுகின்றன ! :)))

      எதை , எப்படி, எப்போ சொல்லனும்னு உங்ககிட்ட ஒரு கிளாஸ் வரணும் அண்ணா, அருமை:)...

      சகோ ?!... கடைசியில குட்டிட்டீங்களே.... என்கிட்ட கிளஸா... ? வேணாம் ! எதிர்கால தலைமுறைக்கு பாடம் நடத்தற நீங்களாவது குழம்பாம இருக்கனும் !

      உளமார்ந்த் நன்றி சகோதரி.

      Delete
  31. நீங்கள் ஒரு குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வேண்டும்? நீங்கள் இது தவறான அல்லது நற்பெயர் இல்லை? நீங்கள் ஒரு வணிக தொடங்கும் பணம் தேவை? நீங்கள் ஒரு கார் கடன் வேண்டும்? நீங்கள் உங்கள் வீட்டில் மீண்டும் அடகு வைக்க வேண்டும்? நீங்கள் ஒரு பெரிய அளவிலான நிறுவனத்தை தொடங்கும் ஒரு பெரும் மூலதன தேவை ? நீங்கள் இந்த ஒரு சரியான தீர்வு வேண்டும்! கடன் மற்றும் கடன் விதிமுறைகளில் உள்ள மேலும் , ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து. அனைத்து விசாரணைகளையும் ஒரு சாதாரண வடிவில் இயக்கிய வேண்டும் கீழே காணப்படும் தொடர்பு தகவல் toviajames9@gmail.com வழியாக எங்களை E-mail:


    கீழே கடன் விண்ணப்ப படிவம் நிரப்ப.
    கடன் விண்ணப்ப படிவம் .

    1) . முழு பெயர்கள் :
    2). நாடு:
    3). மாநிலம்:
    4). பெருநகரம்:
    5). விண்ணப்பதாரர் முகவரி:
    6). தொலைபேசி:
    7). பால்:
    8). திருமண நிலை:
    9). தொழில்:
    10). மாத வருமானம் :
    11). கடன் தொகை:
    12). கடன் காலம்:
    13). கடன் நோக்கம் :

    தயவுசெய்து அன்புடன்

    ReplyDelete
    Replies
    1. சாமி ! கொசுத்தொல்லையைவிட இந்த கடன் தொல்லை தாங்க முடியலையே !

      என்வீட்டை எதுக்கைய்யா நான் அடகு வைக்கனும் ?

      ஆளை விடுங்ப்பூ !

      Delete
  32. சாம் சார்

    உங்கள் பதிவை ரசித்தேனோ இல்லையோ பின்னூட்டத்தில் ஜுனூன் தமிழில் வெளிநாட்டுக்காரர்கள் சிலர் உங்களுக்கு லோன் வேண்டுமா என கேட்டு அதற்காக அவர்கள் பயன்படுத்திய google traslate ஐ வாசித்து ரசித்தேன்.

    வித்தியாசமான தலைப்பைப் பார்த்துவிட்டுத்தான் உள்ளே வந்தேன். இந்தப் பதிவும் வித்தியாசமாகவே உள்ளது. இந்தியர்களுக்கு மருத்துவ விழிப்புணர்வு குறைவு என்பதும் குடும்ப டாக்டர் வைத்துக் கொள்ளும் பக்குவம் குறைவு என்பதும் உண்மையே !

    சாதாரண வலிகளுக்கே பரிசோதனை என்ற பெயரில் சில ஆயிரங்களை நாம் தொலைக்க வேண்டியுள்ளது. ஏழைகள் எங்கு செல்ல? அரசு மருத்துவமனை ஒன்றுதான் கதி. அங்கு அவர்கள் நடத்தப்படும் முறை பெரிய அவலம். ஒரு சின்ன ஸ்கேன் எடுக்க பல வாரங்கள் காத்துக் கிடப்பார்கள். சுஜாதாவின் ' நகரம் ' கதையில் வருவதை விட மோசமாக இருக்கும் . யாரை நோக?

    நோயின் கொடுமையை விட எதனால் ஏற்பட்டிருக்கும் என்ற வீண் கற்பனைகள் நமக்கு ஏற்படுவது இன்னும் கொடுமை. அதுவரை கோவிலுக்கு போகாதவர் கூட எல்லா கடவுளையும் கூப்பிட்டு வேண்டுவார் பாருங்கள் ...அதுதான் முதலில் நடக்கும் . உங்களுக்கு நடக்கவில்லையா?


    ReplyDelete
    Replies
    1. சார்லஸ்...

      எனது பதிவை மட்டுமல்லாது பின்னூட்டங்களையும் கவனமாக படித்ததற்கு நன்றிகள் பல !

      இன்னும் சில கடன் கொசுக்களும் என் வலைப்பூவை மொய்த்துள்ளன !!!

      உள்ளார்ந்த சமூக விழிப்புணர்வுடன் பின்னூட்டமிட்டுள்ளீர்கள்... தரமான சுகாதாரமும், கல்வியும் கொடுக்க வக்கற்ற நிர்வாகத்தை ஜனநாயக்ம் என்று சொல்ல நா கூசுகிறது !

      " நோயின் கொடுமையை விட எதனால் ஏற்பட்டிருக்கும் என்ற வீண் கற்பனைகள் நமக்கு ஏற்படுவது இன்னும் கொடுமை. அதுவரை கோவிலுக்கு போகாதவர் கூட எல்லா கடவுளையும் கூப்பிட்டு வேண்டுவார் பாருங்கள் ...அதுதான் முதலில் நடக்கும் . உங்களுக்கு நடக்கவில்லையா? "

      என் எழுத்தில் பொய் கலக்க விருப்பமில்லை என்பதால் உண்மையை சொல்கிறேன்...

      எனக்கும் நடந்தது !!!

      மீன்டும் நன்றி நண்பரே !

      Delete
  33. வாழ்த்துக்கு நன்றி நண்பரே...

    ReplyDelete
  34. கடன் மையத்தில் வரவேற்கிறோம், நாம் நாடு முழுவதும் மக்கள் கடன் கொடுக்க இங்கே. எனது நிறுவனம் ஒரு உண்மையான மற்றும் உண்மையான கடன் நிறுவனம் ஆகும். நீங்கள் ஒரு கடன் வேண்டும் என்றால், உங்கள் ஐடி கொண்டு விண்ணப்பிக்க இரண்டு நாட்களில் உள்ள உங்கள் கணக்கில் மாற்ற முடியுமா கடன் பெற. மின்னஞ்சல்: abdulrasyindiloancenter@gmail.com

    ReplyDelete
  35. Hello,
    நான் மார்க் பைசா கூட, ஒரு தனியார் கடன் கடன், நான் யார்
    வாழ்க்கை முறை வாய்ப்பு கடன் கொடுக்கிறது.
    நீங்கள் உங்கள் கடன்களை துடைக்க ஒரு அவசர கடன் வேண்டும் அல்லது நீங்கள் உங்கள் வணிக மேம்படுத்த ஒரு மூலதன கடன் வேண்டும்?
    நீங்கள் நிராகரிக்கப்பட்ட
    வங்கிகள் மற்றும் இதர நிதி அமைப்புகள்?
    நீங்கள் ஒரு ஒருங்கிணைப்பு கடன் அல்லது ஒரு அடமான வேண்டும்?
    நாம் அனைவரும் உங்கள் நிதி பிரச்சினைகள் கடந்த ஒரு விஷயம் செய்ய இங்கே இருக்கும் இன்னும் தேட. தனி நபர்கள் வெளியே நிதி கடன்
    நிதி உதவி தேவை மோசமான கடன் அல்லது பணம் தேவை இல்லை என்று
    2% என்ற விகிதத்தில் வணிக முதலீடு செய்ய, மின் கட்டணம் செலுத்த வேண்டும். நான் நாம் நம்பத்தகுந்த மற்றும் பயனாளியின் உதவிகள் மற்றும் ஒரு loan.So நீங்கள் வழங்க மின்னஞ்சல் வழியாக இன்று எங்களை தொடர்பு தயாராக இருக்க வேண்டும் என்று நீங்கள் தெரிவிக்க இந்த நடுத்தர பயன்படுத்த வேண்டும்:
    (pennymacloanservices@gmail.com)

    ReplyDelete
  36. Cahya கிரானா கடன் லிமிடெட் உலகம் முழுவதற்குமான முன்னணி சுயாதீன கடன் நிறுவனங்களில் ஒன்றாகும். நாம் நன்றாக நிறுவப்பட்ட மற்றும் உங்கள் தேவைகள் மற்றும் ஆண்டுகளில் தனிப்பட்ட தேவைகளை ஒரு நல்ல புரிதல் உருவாக்கியுள்ளது. நாம் மிகவும் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிகிச்சை மற்றும் தொழில் நட்பு மற்றும் பயனுள்ளதாக இருக்கும் என்று ஒரு சேவையை வழங்கும் கடமைப்பட்டுள்ளோம். எங்கள் நடைமுறைகள் நாம் ஒவ்வொரு நிரல் எங்கள் நெகிழ்வான அணுகுமுறை சேர்ந்து ஒரு குறைந்தபட்ச உங்கள் சூழ்நிலையில், முறைப்படி பொருத்தமாக ஒரு தயாரிப்பு முடிக்க, மற்றும் அந்த உறுதி செய்ய, நீங்கள் பொருந்தும் வடிவமைக்கப்பட்ட, உங்கள் கடன் விண்ணப்பம் உறுதி. நாங்கள் வாடிக்கையாளர்கள் மாற்ற மற்றும் அவர்களின் வாழ்க்கையை விட 47 ஆண்டுகள் மேம்படுத்த உதவி மற்றும் நாம் தொழில்கள் மற்றும் தனிநபர்கள் அனைத்து வகையான கடன் வழங்குகின்றன ஒரு தனிப்பட்ட நிலையில் உள்ளன, உண்மையில் சுயாதீன உள்ளன. எங்கள் இலக்கு உங்கள் நிதி தேவைகளை பூர்த்தி செய்ய உள்ளது மற்றும் உங்கள் திருப்தி எங்களுக்கு மிகவும் முக்கியமானது ஆகும். என்று நீங்கள் எங்கள் சேவைகளை ஆர்வமாக இருந்தால் இன்று நாம், 2% வட்டி கடன் கொடுக்க எங்களுக்கு திரும்ப பெற வேண்டும் ஏன் உள்ளது.
    மின்னஞ்சல்: cahya.creditfirm@gmail.com

    ReplyDelete
  37. கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே வணக்கம்
            நான் அவருக்கு அமைக்க முடிவு திருத்த சர்ச், அமெரிக்காவில் மிக பெரிய புரட்டஸ்தாந்து தேவாலயத்தில் மூத்த போதகர், நாம் ஒன்றாக வந்து சில மக்கள் நிதி ஆதரவு மற்றும் உதவிகளை சில பிட் வேண்டும் என்று பார்க்க வேண்டும் அமைச்சர் விக்டோரியா Osteen, பாஸ்டர் யோவேல் Osteen மனைவி இருக்கிறேன் நீங்கள் ஒரு விஷயமே இல்லை இருந்து ஆனால் நாம் என்ன உத்தரவாதம் நீங்கள் ஒரு கடன் தகுதி எங்கே 18 மேலே அனைவருக்கும், மூலம் நன்மை என்று ஒரு கடன் நிறுவனம், அது உங்கள் வழங்கப்படும் வங்கி கணக்கில் ஒரே நாளில் பட்டுவாடா,
    2% குறைந்த வட்டி விகிதம்
    நெகிழ்வான கடன் மற்றும் மாதாந்திர பணம் நிபந்தனைகள்

    விக்டோரியா Osteen கடன் வழங்கும் நிறுவனம், ஒரு கிரிஸ்துவர் கட்டப்பட்டது கடன் வழங்கும் நிறுவனம் இது சட்டப்படி மற்றும் அதிகாரப்பூர்வமாக உரிமம் கடன் நிறுவனம் தொடர்பு.
    மேலும் தகவலுக்கு Email- victoriaosteenloanfirm@gmail.com

    ReplyDelete
  38. எல்லோருக்கும் வணக்கம்,

    நான், நல்ல வேலை புகழ் ஒரு தனியார் கடன் கடன் பெர்ரி வெள்ளை இருக்கிறேன்
    நீங்கள் ஒரு மரியாதைக்குரிய நிறுவனம் இருந்து அவசர கடன் வேண்டும் என்றால் இன்று விண்ணப்பிக்க,
    பிறகு நல்ல நிலைமைகள் மற்றும் தொழில் உறவுகள் உங்களுக்கு
    நாங்கள் வங்கிகள் கடன் வழங்கலாம் என எங்களை தொடர்பு கொள்ள வேண்டும்
    மலிவு வட்டி 3% விகிதம் மற்றும் நமக்கு உங்கள் வேலை
    ஒரு நல்ல அனுபவம் இருக்கும். நீங்கள் ஆர்வமாக இருந்தால், தொடர்பு
    எங்களுக்கு மின்னஞ்சல் மூலம்: Perrywhitefirms@outlook.com அல்லது
    +2348136145452

    ReplyDelete
  39. வணக்கம் நீங்கள் 2% ஒரு குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வேண்டும்? நீங்கள் எந்த இணை அல்லது மோசமான கடன் இல்லை, ஏனெனில் நீங்கள் வங்கி கடன்கள் மறுக்கப்படுகின்றன? நீங்கள் வங்கி மன அழுத்தம் சோர்வாக? பிறகு நீங்கள் சரியான இடத்தில் உள்ளன, உங்கள் மின்னஞ்சல் வழியாக இப்போது எங்களை தொடர்பு (mabelhernandezloan@gmail.com)

    ReplyDelete
  40. நீங்கள் ஒரு அவசர நிதி கடன் கடன் தேவை?
    * உங்கள் வங்கி கணக்கில் மிக வேகமாக மற்றும் உடனடி பரிமாற்ற
    * கடனை திருப்பி செலுத்தும் நீங்கள் பணம் கிடைக்கும் எட்டு நாட்களுக்குப் பிறகு தொடங்குகிறது
    வங்கி கணக்கு
    2% * குறைந்த வட்டி விகிதம்
    * நீண்ட கால கடனை திருப்பி செலுத்தும் (1-30 ஆண்டுகள்) நீளம்
    * நெகிழ்வான கடன் விதிமுறைகளில் மற்றும் மாத கட்டணம்
    *. அது எவ்வளவு நேரம் நிதியளிக்க வேண்டும்? கடன் விண்ணப்பம் சமர்ப்பித்த பிறகு
    நீங்கள் ஒரு பூர்வாங்க பதில் 24 மணி நேரத்திற்கும் குறைவாக எதிர்பார்க்க முடியும்
    அவர்கள் தேவையான தகவல்களை பெற்ற பிறகு 72-96 மணி நிதி
    நீங்கள் இருந்து.

    அங்கீகரிக்கப்பட்ட இந்த நியாயமான மற்றும் உரிமம் நிறுவனம், தொடர்பு
    எல்லோரும் நிதி உதவி கொடுக்க
    மேலும் தகவல் மற்றும் கடன் விண்ணப்ப படிவம் க்கான

    மின்னஞ்சல்: cashfirmarena@gmail.com


    சிறந்த அன்புடன்
    சர் ஜோயல் வில்லியம்ஸ்
    பண கடன் FIRM நிறுவனம்
    தலைமை நிர்வாக அதிகாரி
    தொலைபேசி: +60183723787

    ReplyDelete
  41. இந்த என் சாட்சி நான் 3% ஒரு மிகவும் குறைந்த வட்டி விகிதத்தில் மலேசிய பிளஸ் கடன் நிறுவனம் ஒரு கடனாகப் பெற்றது எப்படி பொது தெரிவிக்க உள்ளது.
    • 100% உத்தரவாதம் மற்றும் நம்பகமான பரிமாற்ற
    • முன் குற்றச்சாட்டுக்கள் இல்லை
    • நெகிழ்வான கடன் விதிகள் மற்றும் நிபந்தனைகளை
    • காலம் (1-20) ஆண்டுகள்
    மேலும் தகவலுக்கு தொடர்பு கொள்ளவும்:
    riggitplus@gmail.com

    ReplyDelete
  42. நான் Mrs.Helen ஜான்சன், தனி நபர்கள் மற்றும் தொழில்கள் உரிமையாளர்கள் நிதி சேவைகளை பல்வேறு வழங்குகின்றன. நாம் அவர்களுக்கு உதவ ஒன்று தொடங்குவதற்கு அல்லது புதிய பிரதேசங்களில் ஒரு விரிவாக்க தனிநபர்கள், சிறிய, நடுத்தர, மற்றும் பெரிய அளவிலான வணிகங்கள் வேலை. நாம் இருக்கும் தொழிலை விரிவுபடுத்த, தலைநகர் உபகரணங்கள் வாங்க, செலவுகளுக்கு மிகவும் தேவைப்படும் போது சிறு வணிகங்கள் நிதி மற்றும் போன்ற விளம்பர, வாடகைக்கு, சீரமைப்பு முதலியன அன்புடன், (helenjohnsonloanfirm68@gmail.com) உன் மகிழ்ச்சி எங்கள் கவலை இல்லை பல தேவைகளை உதவும்.

    ReplyDelete
  43. நான் திருமதி ஹெலன் ஜான்சன், ஒரு பணம் கடன், நான் ஒரு நீண்ட கால கடன்களை ஒரு மற்றும் ஆஃப் செலுத்த விரும்பும் ஒரு இலாபகரமான வணிக, நிறுவ விரும்பும் தனிநபர் அல்லது நிறுவனம் கடன் கொடுக்க. நாம் எப்போதாவது நீங்கள் யோசிக்க முடியும் கடன் எந்த கொடுக்க, நாம் ஒரு மிக கடன் மலிவு வட்டி விகிதம், தனியார் மற்றும் அரசு கடன் இருவரும் ஒரு உள்ளன. எங்கள் சூடான மின்னஞ்சல் முகவரியை கொண்டு இப்போது எங்களை தொடர்பு: (helenjohnsonloanfirm68@gmail.com) உன் மகிழ்ச்சி எங்கள் கவலை இல்லை.

    ReplyDelete
  44. நல்ல நாள் அனைவருக்கும் எனது பெயர் திரு. அப்துல் ஃபைஸ் ஸைஃபி'ஐ பின் அப்துல் நான் சிங்கப்பூரிலிருந்து வருகிறேன், இந்த கம்பெனியிலிருந்து நேற்று நான் $ 30,000.00 க்கு என் கடன் பெற்றுக்கொண்டது போல் இந்த நிறுவனத்திற்கு ஒரு உண்மையான கடனளிப்போர் கடன் வாங்குவதற்காக நீங்கள் எவருக்கும் தெரிவிக்கவோ, ஊழல் தவிர்க்க ஏனெனில் ஒரு வாழ்க்கை சாட்சியம் இந்த மின்னஞ்சல் வழியாக அவர்களை தொடர்பு: (mrslindarobertloanfirm@gmail.com) மற்றும் தயவு செய்து என் பெயர் குறிப்பு பரிந்துரை

    ReplyDelete
  45. அன்பார்ந்த வாடிக்கையாளரே ,

    வேலை தொடங்குவதற்கு அவசர கடன் தேவை, கடன் கடன், ஒரு கார் அல்லது ஒரு வாங்க
    வீடு, ஆம் என்றால் இனி எந்த வகையான கடன் வட்டி விகிதமும் கவலைப்படாது
    2% இணை மற்றும் முறையான வட்டி விகிதம் இல்லாமல் கடன் காசோலை இல்லாமல். என்றால்
    பின்வரும் கடன் தகவலை எங்களுக்குத் திருப்பிச் செலுத்துவது அவசியம்
    தொடர்பு மின்னஞ்சல்: catherineloanfirm96@gmail.com

    உங்களுக்கு ஒரு மோசமான கடன் இருக்கிறதா?
    பில்களுக்கு பணம் கொடுக்க உங்களுக்கு பணம் வேண்டுமா?
    நீங்கள் ஒரு புதிய வேலை தொடங்க வேண்டுமா?
    மோசமான நிதியளிப்பின் காரணமாக நீங்கள் முடிக்கப்படாத திட்டம் வைத்திருக்கிறீர்களா?
    உங்கள் பகுதியின் நிபுணத்துவ பகுதியின் முதலீட்டில் முதலீடு செய்ய விரும்புகிறீர்களா?
    நீங்கள் லாபம் சம்பாதித்தீர்களா? நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று உங்களுக்கு தெரியாது.

    நாங்கள் பின்வரும் கடன்களை வழங்குகிறோம்: தனிப்பட்ட கடன்கள் (பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பற்ற),
    கடன் கடன்கள் (பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பற்றவை)
    ஒருங்கிணைந்த கடன் மாணவர் கடன், ஒருங்கிணைப்பு கடன் மற்றும் மற்றவர்கள்.
    கடன் விண்ணப்ப படிவம்

    1. முழு பெயர்கள்:
    2. நாடு:
    3. மாநிலம்:
    4. தொடர்பு முகவரி:
    கடன் தேவைப்படும் தொகை:
    6. கடன் கால:
    7. மாதாந்த வருமானம்:
    8. நேரடி தொலைபேசி எண்:
    நீங்கள் முன் ஒரு ஆன்லைன் கடன் பயன்படுத்தப்படும் (ஆம் அல்லது இல்லை)

    EMAIL: catherineloanfirm96@gmail.com


    உண்மையுள்ள,

    ReplyDelete
  46. ஒரு விரைவான, நீண்ட அல்லது குறுகிய கால கடனுடன் குறைந்த வட்டி விகிதத்தை உங்களுக்கு வேண்டுமா?
    3% ஆக குறைந்தது?

    Gregowenloanfirm1@gmail.com

    நாங்கள் வணிக கடன் வழங்குகிறோம்:
    தனிப்பட்ட கடன்:
    முகப்பு கடன்:
    ஆட்டோ கடன்:
    மாணவர் கடன்:
    கடன் ஒருங்கிணைப்பு கடன்: e.t.c.

    உங்கள் கிரெடிட் ஸ்கோர் எந்த விஷயத்திலும் இல்லை
    உலகெங்கிலும் உள்ள எங்கள் பல வாடிக்கையாளர்களுக்கு நிதி சேவைகள்.
    எங்கள் நெகிழ்வான கடன் தொகுப்புகளுடன்,
    கடன்கள் செயல்படுத்தப்படலாம் மற்றும் கடனாளருக்குள் மாற்றப்படும்
    சாத்தியமான குறுகிய நேரம்.
     
    உங்களுக்கு விரைவான கடன் தேவைப்பட்டால் மின்னஞ்சல் வழியாக எங்களை தொடர்பு கொள்ளுங்கள்:

    gregowenloanfirm1@gmail.com

    3% நம்பகமான கடன் வழங்குதல் உத்தரவாதம்.

    ReplyDelete
  47. 48 மணி நேரத்திற்குள் கடன் வாங்கவும்

    நல்ல நாள்

    நீங்கள் ஒரு தொழிலதிபர் இருக்க வேண்டும், ஒரு திட்டம் தொடங்க அல்லது ஒரு அபார்ட்மெண்ட் வாங்க அல்லது நீங்கள் எந்த நிதி சிரமம் இருந்தால், உங்கள் உதவி இப்போது வருகிறது, நீங்கள் கடன் பெற முயற்சி இழந்துவிட்டாய், உங்கள் கனவுகள் இறக்க விட வேண்டாம், தொடர்பு திரு ஃப்ரெட் லாரி, ஒரு விரைவான மற்றும் நம்பகமான கடன்.

    கீழே கொடுக்கப்பட்டுள்ள கடன் வகைகளை நாங்கள் வழங்குகிறோம்:

    1 நிறுவனத்தின் கடன்
    2. வணிக கடன்
    3. குடியிருப்பு கடன்
    4. ஆட்டோ கடன்
    5. கார் கடன்

    நாங்கள் 3,000 வட்டி விகிதத்தில் 100,000.00 யூரோ இருந்து 500,000,000,000.00 வரை எங்களுக்கு உதவ தயாராக இருக்கும் தீவிர மற்றும் நேர்மையான வாடிக்கையாளர்களுக்கு கடன்களை வழங்குகிறோம்.

    எங்கள் மின்னஞ்சல் (fredlarryloanfirm@gmail.com) அல்லது (fredlarryloanfirm@hotmail.com) வழியாக விரைவாக எங்களை தொடர்பு கொள்க.

    Whatssap எண்: +2347061892843
    ஸ்கைப்: fredlarry12

    கையொப்பமிடப்பட்ட
    மேலாளர்
    திரு ஃப்ரெட் லாரி

    ReplyDelete
  48. 48 மணி நேரத்திற்குள் கடன் வாங்கவும்

    நல்ல நாள்

    நீங்கள் ஒரு தொழிலதிபர் இருக்க வேண்டும், ஒரு திட்டம் தொடங்க அல்லது ஒரு அபார்ட்மெண்ட் வாங்க அல்லது நீங்கள் எந்த நிதி சிரமம் இருந்தால், உங்கள் உதவி இப்போது வருகிறது, நீங்கள் கடன் பெற முயற்சி இழந்துவிட்டாய், உங்கள் கனவுகள் இறக்க விட வேண்டாம், தொடர்பு திரு ஃப்ரெட் லாரி, ஒரு விரைவான மற்றும் நம்பகமான கடன்.

    கீழே கொடுக்கப்பட்டுள்ள கடன் வகைகளை நாங்கள் வழங்குகிறோம்:

    1 நிறுவனத்தின் கடன்
    2. வணிக கடன்
    3. குடியிருப்பு கடன்
    4. ஆட்டோ கடன்
    5. கார் கடன்

    நாங்கள் 3,000 வட்டி விகிதத்தில் 100,000.00 யூரோ இருந்து 500,000,000,000.00 வரை எங்களுக்கு உதவ தயாராக இருக்கும் தீவிர மற்றும் நேர்மையான வாடிக்கையாளர்களுக்கு கடன்களை வழங்குகிறோம்.

    எங்கள் மின்னஞ்சல் (fredlarryloanfirm@gmail.com) அல்லது (fredlarryloanfirm@hotmail.com) வழியாக விரைவாக எங்களை தொடர்பு கொள்க.

    Whatssap எண்: +2347061892843
    ஸ்கைப்: fredlarry12

    கையொப்பமிடப்பட்ட
    மேலாளர்
    திரு ஃப்ரெட் லாரி

    ReplyDelete
  49. 48 மணி நேரத்திற்குள் கடன் வாங்கவும்

    நல்ல நாள்

    நீங்கள் ஒரு தொழிலதிபர் இருக்க வேண்டும், ஒரு திட்டம் தொடங்க அல்லது ஒரு அபார்ட்மெண்ட் வாங்க அல்லது நீங்கள் எந்த நிதி சிரமம் இருந்தால், உங்கள் உதவி இப்போது வருகிறது, நீங்கள் கடன் பெற முயற்சி இழந்துவிட்டாய், உங்கள் கனவுகள் இறக்க விட வேண்டாம், தொடர்பு திரு ஃப்ரெட் லாரி, ஒரு விரைவான மற்றும் நம்பகமான கடன்.

    கீழே கொடுக்கப்பட்டுள்ள கடன் வகைகளை நாங்கள் வழங்குகிறோம்:

    1 நிறுவனத்தின் கடன்
    2. வணிக கடன்
    3. குடியிருப்பு கடன்
    4. ஆட்டோ கடன்
    5. கார் கடன்

    நாங்கள் 3,000 வட்டி விகிதத்தில் 100,000.00 யூரோ இருந்து 500,000,000,000.00 வரை எங்களுக்கு உதவ தயாராக இருக்கும் தீவிர மற்றும் நேர்மையான வாடிக்கையாளர்களுக்கு கடன்களை வழங்குகிறோம்.

    எங்கள் மின்னஞ்சல் (fredlarryloanfirm@gmail.com) அல்லது (fredlarryloanfirm@hotmail.com) வழியாக விரைவாக எங்களை தொடர்பு கொள்க.

    Whatssap எண்: +2347061892843
    ஸ்கைப்: fredlarry12

    கையொப்பமிடப்பட்ட
    மேலாளர்
    திரு ஃப்ரெட் லாரி

    ReplyDelete
  50. 48 மணி நேரத்திற்குள் கடன் வாங்கவும்

    நல்ல நாள்

    நீங்கள் ஒரு தொழிலதிபர் இருக்க வேண்டும், ஒரு திட்டம் தொடங்க அல்லது ஒரு அபார்ட்மெண்ட் வாங்க அல்லது நீங்கள் எந்த நிதி சிரமம் இருந்தால், உங்கள் உதவி இப்போது வருகிறது, நீங்கள் கடன் பெற முயற்சி இழந்துவிட்டாய், உங்கள் கனவுகள் இறக்க விட வேண்டாம், தொடர்பு திரு ஃப்ரெட் லாரி, ஒரு விரைவான மற்றும் நம்பகமான கடன்.

    கீழே கொடுக்கப்பட்டுள்ள கடன் வகைகளை நாங்கள் வழங்குகிறோம்:

    1 நிறுவனத்தின் கடன்
    2. வணிக கடன்
    3. குடியிருப்பு கடன்
    4. ஆட்டோ கடன்
    5. கார் கடன்

    நாங்கள் 3,000 வட்டி விகிதத்தில் 100,000.00 யூரோ இருந்து 500,000,000,000.00 வரை எங்களுக்கு உதவ தயாராக இருக்கும் தீவிர மற்றும் நேர்மையான வாடிக்கையாளர்களுக்கு கடன்களை வழங்குகிறோம்.

    எங்கள் மின்னஞ்சல் (fredlarryloanfirm@gmail.com) அல்லது (fredlarryloanfirm@hotmail.com) வழியாக விரைவாக எங்களை தொடர்பு கொள்க.

    Whatssap எண்: +2347061892843
    ஸ்கைப்: fredlarry12

    கையொப்பமிடப்பட்ட
    மேலாளர்
    திரு ஃப்ரெட் லாரி

    ReplyDelete
  51. Are you in need of a loan?
    Do you want to pay off your bills?
    Do you want to be financially stable?
    All you have to do is to contact us for
    more information on how to get
    started and get the loan you desire.
    This offer is open to all that will be
    able to repay back in due time.
    Note-that repayment time frame is negotiable
    and at interest rate of 2% just email us:
    reply to us (Whats App) number: +919394133968
    patialalegitimate515@gmail.com
    Mr Jeffery

    ReplyDelete